Tuesday, August 19, 2008

குழந்தையும் அறியவேண்டும் குடும்ப வாழ்வை

அதற்கான சிறு துளிகள்..........

1.நீங்கள் என்ன வேலை பார்க்றீர்கள், உங்களுடைய வேலையின் தன்னை என்ன,
அதற்கான மாத வருமானம் எவ்வளவு என்பதைக் குழந்தைக்குச் சொல்லுங்கள்.
எதற்காக வேலைக்குப் போக வேண்டும் என்பதையும் புரியவையுங்கள்.

2.பணத்தை தொட்டாலே தவறு என அலறாமல் ,நாணயத்துக்கும் ¨ரூபாய் நோட்டுக்கும் உள்ள வித்தியாசங்களைக் கற்றுக் கொடுங்கள்;

3. குழந்தையின் படிப்புக்காகச் செலவாகும் ஒவ்வொரு காசையும் தனியாக குறிந்து வையுங்கள். குழந்தைக்கு புரிகின்றதோ ,இல்லையோ வருட இறுதியில்,அந்தப் பட்டியலை படிந்து காட்டுங்கள்.

4.கடைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். பொருட்களில் மேல் குறிப்பிட்டிருக்கும் விலையைப் படிக்கக் கற்றுக் கொடுங்கள்.
பணத்தை குழந்தையின் கையில் கொடுத்து எண்ணிப் பார்த்துக் கொடுக்கப் பழக்குங்கள்.

5. அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருந்தால் ,அதை குழந்தையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்தனை கஷடங்களையும் தாண்டி வருவததான் வருமானம் என்பதை புரிய வையுங்கள்.

6 ஆளில்லாத அறையில் மின்விசிறி சுற்றுவது , யாரும் பார்க்காமல் டி வி இயங்குவது ...சின்ன சின்னவிரயங்கள் கூட குடும்ப நிதிநிர்வாகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லி ,அதைத் தவிர்க்கவும் சொல்லிக் கொடுங்கள்.

7 விருப்பத்திற்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துங்கள். விருப்பு கிற பொருள் எல்லாம் தேவையானதாக இருக்க வேண்டியதில்லை என்பதையும்,
தேவைக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும் என்பதையும் தெளிவாக்குங்கள்.

No comments: