Thursday, August 14, 2008

தாயும் சேயும்

அடிக்கடி கர்பினிபெண்களுக்கு ஏன் அறுவைச்சிகிச்சை
நடைபெறுகின்றது? (இதற்காண சில காரணம்)

1.பிரசவ வலிஆரம்பிக்கும்போதே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு
நஞ்சுக்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது

2. முதல் பிரசவம் அறுவைச்சிகிச்சையாக இருந்தால் இரண்டாவது மறையும்
அறுவைச் சிகிச்சைக்கு செல்வது பொதுவாக பாதுகாப்பானது.காரணம்
பிரசவ வலியினால் கர்ப்பப்பை கிழிந்து போக வாய்ப்பிருப்பதைத் தவிர்க்கலாம்

3. குழந்தையின் தலைபெரிதாக இருந்து தாயின் இடுப்பெலும்ப சிறியதாக
இருக்கும் போது

4.பனிக்குடம் உடைந்து பிரசவவலி வரவில்லை என்றாலும் அறுவைச்சிகிச்சை
தேவைப்படும்

5.பனிக்குடம் உடைந்தம் பிரசவ வலி அதிகமாக இருந்தும் குழந்தை பிறக்கவில்லை
என்றால் அறுவைச்சிகிச்சை தேவைப்படும்

6.ஏற்கெனவே சில முறை குழந்தை இறந்து பிறந்தவர்களுக்கு நிறை மாதத்திற்கு
முன்பே அறுவைச்சிகிச்சை தேவைப்படும்

7.கர்ப்பப்பை அடி இறங்கி அதனை சரி செய்ய அறுவைச்சிச்சை செய்திருந்தால்
தேவைப்படும்

8. கருப்பை வாயில் புற்றுநேய் தாக்கி இருந்தால் தேவைப்படும்

9. தாய்க்கு அதிக இரத்த அழுத்தம் நீரழிவு போன்ற பிரச்சைகள் இரக்குமானால்
குழந்தைக்கு பிரச்சை ஏற்படுவதை தடுக்க தேவைப்படும்

10. நிறைமாதத்திற்குப் பிறகும் வலி தூண்டிவிடப்பட்ட பிறகும் வலி வராத நிலையில்
தேவைப்படும்

11. நஞ்சுக்கொடி பிரசவப் பாதையை அடைத்திருந்தால் தேவைப்படும்

12. கருப்பையில் ஏதாவது கட்டி இருந்தால் தேவைப் படும்

13. வயது முதிர்ந்த பெண்களுக்கு சுழ்நிழையைப் பொறுத்து தேவைப்படலாம்

14. யோனிக்குழாயின் அமைப்பு சீரற்று இருந்தால் தேவைப்படலாம்

15. குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருந்தால் தேவைப்படும்

16 செயற்கை முறை கருத்தரிப்பு குழந்தைக்கு அறவைச்சிகிச்சை தான்
பாதுகாப்பு என்றால் தேவைப் படும்

No comments: