Monday, August 24, 2009

வாழ்கை ஒரு சவால்

வாழ்கை ஒரு சவால் _அதனைச் சந்தியுங்கள்!
வாழ்கை ஒரு பரிசு_ஏற்றுக்கொள்ளுங்கள்!
வாழ்கைஎன்பது வேதனை_ சமாளியுங்கள்!
வாழ்கைஎன்பதுதுன்பம்_தேற்கடியுங்கள்!
வாழ்கை என்பது கடமை_ நிறைவேற்றுங்கள்!
வாழ்கை என்பதுவிளையாட்டு_விளையாடுங்கள்!
வாழ்க என்பது மாயை_ விலக்கிப் பாருங்கள்!
வாழ்கை என்பதுபாட்டு_இசைந்துப் பாருங்கள்!
வாழ்கை என்பது ஆட்டம்_ ஆடிப் பாருங்கள்!
வாழ்கை என்பது தருணம்_ பயன்படுத்திப் பாருங்கள்!
வாழ்கை என்பது பயணம்_முடித்து வையுங்கள்!
வாழ்கை என்பது அன்பு_அனுபவிந்துப் பாருங்கள்!
வாழ்கை என்பது அழகு_ஆராதனை செய்யுங்கள்!
வாழ்கை என்பது சோதனை_கடந்து பாருங்கள்!
வாழ்கை என்பது போராட்டம்_ எதிர்ந்து நில்லுங்கள்!
வாழ்கை என்பது புதிர்_ விடுவித்து விடுங்கள்!
வாழ்கை என்பது லட்சியம்_அதை அடைந்து விடுங்கள்!
_விவேகாந்தர் சொன்னதில் சில................................

Friday, August 21, 2009

நான் ரசித்தவை...

அவள் அழகை என்னால்
வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாது ஒரு வயலின் தாருங்கள்
வாசிந்து காட்டுகின்றேன்...
.....
கலீல் ஜிப்பாரானின் கவிதை

Monday, July 20, 2009

சிந்தனைத் துளி........

கல்வி என்னுள்ளத்தில் உலக வாழ்கை எவ்வாறு நடைபெறுகிறது
என்பதற்கும் எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கும் மிடையே
கடுமையான போராட்டத்தை மூட்டிவிட்டது.


எதிர்காலத்தை நமக்கு எவரும் தடைசெய்ய இயலாது.

அன்பைக்கொடு,உதவியைக்கொடு,உன்னால் இயன்றளவு சிறிதேனும் கொடு
ஆனால் எதற்கும் விலைபேசும் பழக்கம் கூடாது.


நல்ல பண்பும் தூயநடத்தையும் இல்லாத உயர்படிப்போ,மேதாவித்தனமோ,
வாசனைத்திரவியத்தினைப் பூசி மணக்க வைத்திருக்கும் பிணத்திற்குச்சமமாகும்.


தவறுகளை ஒத்துக்கொள்ள தைரியமும்,அதனை திருத்திக்கொள்வதற்கான
பலமும் தான் வெற்றிபெறுவதற்கு சிறந்த குணாம்சமாகும்.

பிறர் செய்வதில் எது உனக்குப் பிடிக்கவில்லையே, அதை நீ மற்றவருக்கு செய்யாதே.


Saturday, June 13, 2009

உண்மை வெற்றிக்கு சில வழிகள்

*பணத்தை பூஜிக்காதீர்கள்
* தாரரள குணத்தை வளர்ந்துக் கொள்ளுங்கள்
* தாராளமாய் மன்னியுங்கள்
*கடவுளுடைய நெறிமுறைகளைப் பின்பற்றுங்கள்
*சுயநலமற்ற அன்னைக் காட்டுங்கள்
* ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருங்கள்
*நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்
* மிதமிஞ்சி உட்கொள்ளாதீர்கள்
*பழிக்குப் பழி வாங்காதீர்கள்
*கடினமாய் உழையுங்கள்
*பொன் விதியை பின்பற்றுங்கள்
*நாவைக் கட்டுப்படுத்துங்கள்

Friday, June 12, 2009

அன்பு ஓர் அருமருந்து

அன்பும் நெருக்கமும் நம்மை நோய்வாய்ப்படவும் செய்யும் குணமடையவும்
செய்யும், நம்மைச் சோகக் கடலில் மூழ்கடிக்கவும் செய்யும் ,இன்பமழையில்
நனையவும் செய்யும்.நம்மை நோகடித்து நொறுக்கவும் செய்யும்
நம்மைத் தூக்கி நிறுத்தவும் செய்யவும்.இதே தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு
ஒரு மருத்து கண்டுபிடிக்கப்பட்டால் எல்லா மருத்துவர்களும் நோயாளிகளுக்கு
அதையே சிபாரிசு செய்வார்கள். இத்தகைய மருந்தைக் கொண்டுக்காமல்
இருப்பது பெரிய குற்றமாகவே கருதப்படும்.

Wednesday, May 27, 2009

இன்றைய சிந்தனைச் சிதறல்

மிக மிக நல்ல நாள் _இன்று
மிகப்பெரிய வெகுமதி_மன்னிப்பு
மிகவும் வேண்டாதது_வெறுப்பு
மிகவும் பெரிய தேவை_சமயோஜித புத்தி
மிகக் கொடிய நோய் _போராசை
மிகவும் சுலபமானது _குற்றம் காணல்
கீழ்த்தரமான வி்டையம்_ பொறாமை
நம்பக்கூடாதது _ வதந்தி
ஆபத்தை விளைவிப்பது_அதிக பேச்சு
செய்யக்கூடாதது _உபதேசம்
செய்ய வேண்டியது _உதவி

அறிந்து கொள்ள வேண்டியவை

உருகும் உள்ளத்தில் உதிப்பது_ அன்பு
இறுகும் உள்ளத்தில் எழுவது _ அகந்தை
அன்பு விளைவிப்பது _ ஒற்றுமை
அகந்தை விளைவிப்பது _ வேற்றுமை
வருவதும் போவதும் _ இன்பம்,துன்பம்
போனால் வராதது _ மானம், உயிர்
தானாக வருவது _ இளமை,முதுமை
நம்முடன் வருவது _பாவம் புண்ணியம்
அடக்கமுடியாதது _ஆசை, துக்கம்
தவிர்க்க முடியாதது _பசி,தாகம்
நம்மால் பிரிக்க முடியாதது_பந்தம்,பாசம்
அழிவைத் தருவது _பொறாமை,கோவம்
எல்லோருக்கும் சமனானது_இறப்பு,பிறப்பு