Saturday, January 3, 2009

நான் படித்ததில்... எனக்குப் பிடித்தவை

கணவன்-மனைவி விவாகரத்தை தேடியலைகின்றீர்களா நீங்களும் வாழ சில யோசனை !! தேடி பாருங்கள் கசப்பிலும் இனிப்பை!! கிடைத்தாலும் கிடைக்கலும்.............................

1.ரொம்ப மரியாதை வச்சிருக்கணும். கால் தொட்டு கும்பிடும் மரியாதை இல்ல
கணவன்-மனைவியின் விருப்பங்களை அலட்சியப்படுத்தாமல் ரசிப்பது தான்
மரியாதை
2. எப்பவும் கடுமையான வார்த்தைகளால் காயப்படுத்திக்க கூடாது. கூலான,
அன்பான வார்த்தைகள் சந்தோஷமாக இருக்கும்போது மட்டுமில்ல, சங்கடமான
சமயங்களிலும் பேசணும்.
3.நேரம் கிடைக்கும் போதெல்லாம் கட்டிப் பிடிக்கணும்,கிடைக்கும் ஒவ்வொறு சந்தர்ப்பத்திலும் முத்தம் கொடுக்கணும்
4.சின்ன சின்ன வீட்டு வேலைகளைக் கூட இரண்டு பேரும் சேர்ந்து செய்யப்
பழகிக்கணும்.ரெண்டு பேரும் பேசிக் கொள்ள நேரம் கிடைக்கும்
5. சண்டை போட்டுக்கிட்டு மனக் குமுறலுடன் படுக்கைக்குப் போகவேண்டாம்
படுக்கப்போகும் முன்பு சண்டையை சுமூகமாக தீர்க்கணும்.
6. சந்தோஷமாக இருப்பதற்கு நேரம், காலம் பார்க்கவேண்டாம் எந்த
எந்த நிபந்தனைகளும் கூடாது. எப்ப விருபினாலும் மகிழலாம்.
7.உங்க நண்பர் பட்டியலில் கண்டிப்பாக கணவனே-மனைவியோ இருக்கணும்,
இல்லையா? உடனே உங்கள் நண்பர்களுக்கு கணவன்-மனைவியை அறிமுகப்படுத்துங்க.
8.தினமும் மதிய உணவை மட்டுமாவது சேர்ந்து சாப்பிடுங்க
9.டேட்டிங் ....கல்யாணமாகாத இளசுகள் புரிஞ்சுக்கறதுக்கா போவாங்க,
கல்யாணமானவங்க நெருக்கம் இன்னும் அதிகமாக போகணும்
10. காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு கல்யாணத்துக்குப்
வாழ்கையில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். அந்த
மாற்றங்கள் எதிர்கொள்ளத் தயார இருக்கணும்.
11. அன்பளிப்பு அன்பை வெளிக்காட்ட வாரம் ஒரு சின்ன பரிசு பொருளாவது
கொடுக்கலாமே
12 .நிறைய பேசுங்க, பேசவிடுங்க, பேசுறதைக் கேளுங்க...மனைவி பேசுவதை
பதில் சொல்லாமல் சும்மா கேட்டாலே அவங்களுக்கு அது பெரிய சந்தோஷம்
13.குற்றம் கண்டுபிடிப்பதே பொழப்பா எடுக்க கூடாது. கணவனோ மனைவியோ
ஏதாவது சின்ன தப்பு செய்திட்டா கண்டுக்க கூடாது..........
14. கணவன், மனைவி உறவு முறையைவிட வேற எந்த உறவு முறையும்
பெரிசு கிடையாது ஸோ ...வீட்டில் முதல் முக்கியத்துவம் உங்க
கணவனுக்கோ, மனைவிக்கோதான் கொடக்கணும் குழந்தை கூட ரெண்டாம்
பட்சம் தான்.
15. சிக்கென்ற உடல்வாகு, உற்சாகமான முகம்...40 வயதிலும் பராமரிக்கனும்
16.கல்யாணமாகி ரொம்ப வருஷமாகியும் ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள
காதல் குறையவில்லைன்னு காட்டிக்கணும். அவர் செய்யுற சின்ன விஷயத்தைக் கூட பாராட்டினால் தான் அந்த காதல் தெரிய வரும்.
17. பெரிய சண்டையில் முடியாதவரை எதைப் பற்றி வேண்டுமானாலும்
விவாதிக்கலாம்.
18. தினமும் இரவு நேரங்களில் சேர்ந்து ஏதாவது ஒரு சினிமா பார்க்கும் பழக்கம்
இருக்கா? இல்லனா உடனே பழகிக்கோக்க...ஒன்று சேர்ந்து நிறைய
விஷயங்களை பகிர்ந்துக்க நல்ல சான்ஸ்
19. இறப்பு மட்டும்தான் நமக்குள் பிரிவை ஏற்படுத்த முடியும்ங்கிற
நம்பிக்கை குடும்ப வாழ்கைக்கு நீங்க கொடுக்கின்ற 100 வீத உணர்வாக
இருக்க வேணும்
20.ஐ லவ் யூ! இந்த வார்தையோட மேஜிக் சொல்லிப் பார்த்தால் தான்
தெரியும்........................................

No comments: