ஏமாற்றம்
*********
அவசர அவசரமாய் ஏற்பாடு, தொடர் தொடராய் வேலை ,நேரத்தின் பற்றாக்குறையாம், பத்துநாட்களில் வெளி நாட்டு மாம்பிள்ளை வருகிறார்.
அயலவர் கூடி அடுக்கடுக்காய் கேள்விகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் பேசினார் பெண்வீட்டார் கையோடு போகிறாள் கணவருடன் பெருமைகள் வேறு
என்ன வேலையாம் பக்கத்து வீட்டார் கேட்டனர் புகையிரத நிலையத்தில்
பெரிய வேலையாம் எல்லோருக்கும் இவர்தான் பெரியவராம்
கதைகதையாய் கூறினர் கேட்பவர்களும் பொறாமை கொள்ளும் வண்ணம் மாப்பிள்ளையும் வந்தார் திருமணமும் முடிந்தது பெண்ணவள் திரும்பவும்
கேட்டாள் என்ன வேலை என்று கணவர் சிரித்துக்கொண்டு காட்டினார்
இதோ பார் என் வேலைக்கான அடையால அட்டைதனை திருப்தியுடன் பெண்ணவள் கூடவே வந்தாள் மகிழ்ச்சியின் உச்சத்தில்
வெளியுலகம் தெரியாது சில நாட்களும் போக அயல் வீட்டாரும் வந்து வந்து போக தனிமையும் தொட அவளின் நண்பி வந்தாள். பார்பதற்காய்
அவளிடமும் அதேபோல் ஒரு அடையாளஅட்டையை பார்த்தாள்.
உடனே தன்னை மறந்து கேட்டாள், நீயும் புகையிரத நிலையத்திலா வேலையென அவளும் இல்லையென்றாள் அப்ப இது, இதுவா ? இது ஒருவருடம் பாவிக்கும் பிரயணச்சீட்டு என்றாள் அப்படியா சும்மா கேட்டேன
என்றாள் ஆனால் மெளனமாக அழுதது அவள் இதயம்
முதல் கண்ணீர் முதல் ஏமாற்றம் கண்டு
*********
அவசர அவசரமாய் ஏற்பாடு, தொடர் தொடராய் வேலை ,நேரத்தின் பற்றாக்குறையாம், பத்துநாட்களில் வெளி நாட்டு மாம்பிள்ளை வருகிறார்.
அயலவர் கூடி அடுக்கடுக்காய் கேள்விகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் பேசினார் பெண்வீட்டார் கையோடு போகிறாள் கணவருடன் பெருமைகள் வேறு
என்ன வேலையாம் பக்கத்து வீட்டார் கேட்டனர் புகையிரத நிலையத்தில்
பெரிய வேலையாம் எல்லோருக்கும் இவர்தான் பெரியவராம்
கதைகதையாய் கூறினர் கேட்பவர்களும் பொறாமை கொள்ளும் வண்ணம் மாப்பிள்ளையும் வந்தார் திருமணமும் முடிந்தது பெண்ணவள் திரும்பவும்
கேட்டாள் என்ன வேலை என்று கணவர் சிரித்துக்கொண்டு காட்டினார்
இதோ பார் என் வேலைக்கான அடையால அட்டைதனை திருப்தியுடன் பெண்ணவள் கூடவே வந்தாள் மகிழ்ச்சியின் உச்சத்தில்
வெளியுலகம் தெரியாது சில நாட்களும் போக அயல் வீட்டாரும் வந்து வந்து போக தனிமையும் தொட அவளின் நண்பி வந்தாள். பார்பதற்காய்
அவளிடமும் அதேபோல் ஒரு அடையாளஅட்டையை பார்த்தாள்.
உடனே தன்னை மறந்து கேட்டாள், நீயும் புகையிரத நிலையத்திலா வேலையென அவளும் இல்லையென்றாள் அப்ப இது, இதுவா ? இது ஒருவருடம் பாவிக்கும் பிரயணச்சீட்டு என்றாள் அப்படியா சும்மா கேட்டேன
என்றாள் ஆனால் மெளனமாக அழுதது அவள் இதயம்
முதல் கண்ணீர் முதல் ஏமாற்றம் கண்டு
No comments:
Post a Comment