Thursday, July 25, 2013

நந்தவனம்,



லட்சிய மனிதர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குவது எப்படி என்கிற கேள்வி உங்களுக்குள் எழலாம். முதலில் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்குப் பிறந்த குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள். அது உங்களுக்குத் தரப்பட்ட பெருமையே தவிர, அதனை ஒரு உரிமையாக நீங்கள் கருதக் கூடாது.



இன்றைய நாட்களில் அதிகமாக பேசப்படும் சில விஷயங்களில் குழந்தை வளர்ப்பும் ஒன்று. பத்து பிள்ளை பெற்றாலும் குழந்தைகளை அசாதாரணமாய் வளர்த்த இந்த கலாச்சாரத்தில், இன்றோ குழந்தை வளர்ப்பு நம்மைப் பாடாய் படுத்துகிறது. குழந்தையும் படுத்துகிறது! கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள் பலர். என்ன செய்வது? சத்குரு சொல்கிறார்
 அவர்கள் உங்கள் உடைமைகளும் அல்ல!
குழந்தைகள் வளர்கிறபோது பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களுக்கு எதையாவது கற்றுத்தர வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால், உங்கள் குழந்தைகளோடு முதலில் உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். யார் அதிக ஆனந்தமாக இருக்கிறீர்கள், நீங்களா… உங்கள் குழந்தைகளா? உங்களைவிட உங்கள் குழந்தை ஆனந்தமாக இருக்கிறது என்றால், வாழ்க்கைக்கு ஆலோசகராக இருக்கிற தகுதி குழந்தைக்குத்தானே இருக்கிறது!

ஒரு குழந்தை பிறக்கிறது என்றால், அது கற்றுக்கொடுப்பதற்கான நேரம் அல்ல, நீங்கள் கற்றுக் கொள்வதற்கான நேரம். நீங்கள் எப்படிச் சிரிப்பது என்பதையே மறந்துவிட்டீர்கள், எப்படி விளையாடுவது என்பதையும் மறந்துவிட்டீர்கள். ஒரு குழந்தை வருகிறபோது, இவற்றை நீங்கள் மறுபடியும் கற்றுக்கொண்டு அற்புதமான மனிதராக மலரலாம். மாறாக, மனிதர்கள் குழந்தைகளைப் பெரியவர்கள்போல நடந்து கொள்ள வைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். வாழ்க்கையை நீங்கள் புரிந்துகொண்ட விதங்களில் உங்கள் குழந்தைகளை வளர்க்க முற்படாதீர்கள். அவர்கள் என்னவாக வேண்டுமோ, அப்படி ஆகட்டும்! 

வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஒரு குழந்தைக்கு நீங்கள் எதைக் கற்றுக்கொடுத்துவிட முடியும்? பிழைப்புக்கு என்று சில தந்திரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உலகோடு உங்களுக்கு இருக்கும் தொடர்பு காரணமாக, அந்தத் தந்திரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவை உங்களை எந்த விதத்திலும் வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்க்கவில்லை. உங்களைவிட உங்கள் குழந்தை, வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. அதற்குக் கற்றுக்கொடுப்பதற்குப் பதில் நீங்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கினால், அன்பும் ஆதரவும் கனிந்த ஒரு வலிமையான உறவை அந்தக் குழந்தையுடன் வளர்த்துக்கொண்டால், அதுவே உங்கள் குழந்தைக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம்!

நீங்கள் வளர்ந்து வந்த பருவத்தில் உங்களுக்குள் ஏதாவது சிக்கல் வந்தால், நீங்கள் உங்கள் பெற்றோரை அணுகினீர்களா அல்லது நண்பர்களை அணுகினீர்களா? உங்களில் பெரும்பாலானவர்கள் நண்பர்களைத்தான் அணுகியிருப்பீர்கள். ஏனென்றால், உங்கள் பெற்றோருக்கு எதுவும் புரியவே இல்லை. அவர்களும் அதே அபத்தங்களை 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு கடந்து வந்திருப்பார்கள். ஆனால் அவற்றை மறந்துவிட்டு ஏதோ வேறொரு கிரகத்தில் இருந்து வந்தது போல் விசித்திரமாக நடந்துகொள்வார்கள். 
 01
பெற்றோர்கள் இப்படி நடந்துகொண்டால் பிள்ளைகள் வெளியில்தான் உதவி தேடிப் போவார்கள். தங்கள் நண்பர்களிடம்தான் ஆலோசனை கேட்பார்கள். அந்த நண்பர்களும் உங்கள் குழந்தை போலவே குழப்பத்தில் இருப்பதால் வழிகாட்டுதல் எந்த விதத்தில் இருக்கும் என்று உங்களால் கணிக்க முடியாது. தனக்குத் தெரிந்ததை அது சொல்லும். எனவே மிகச் சிறந்த வழி என்னவென்றால், உங்களை எளிதாக அனுகும் விதத்தில் இணக்கமான நல்லுறவை குழந்தைகளோடு வளர்த்துக்கொள்வதுதான். குழந்தைகளிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்காதீர்கள், அன்பை எதிர்பாருங்கள்.

குழந்தைகள் தங்களை மதித்து நடக்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகிறார்கள். நீங்கள், உங்கள் குழந்தைகளுக்குச் சில ஆண்டுகள் முன்னதாக பூமிக்கு வந்தீர்கள். உடலளவில் குழந்தையைவிட பெரிதாக இருக்கிறீர்கள். பிழைப்புக்கு சில தந்திரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். இவற்றைவிட எந்த விதத்தில் நீங்கள் உங்கள் குழந்தையைக் காட்டிலும் மேம்பட்டிருக்கிறீர்கள்? 

உங்கள் இயல்புகளை குழந்தைகளின் மீது திணிக்காமல் நட்பு ரீதியான உறவை உருவாக்கிக்கொண்டால், அவர்கள் தவறான பாதைக்கு போக வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அதே நேரம் 100% உத்தரவாதம் கிடையாது. எப்போது ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டீர்களோ, அப்போதே சில அபாயங்களுக்கும் நீங்கள் தயாராக வேண்டும். ஏனென்றால், உங்கள் குழந்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தப் போவது நீங்கள் மட்டுமல்ல, உங்கள் வீதி தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது, தொலைக்காட்சி தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் பள்ளியில் இருப்பவர்களும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள். 

இப்படி லட்சக்கணக்கான தாக்கங்கள் ஏற்படப் போகின்றன. அவற்றில் எந்தத் தாக்கத்தின் மீது உங்கள் குழந்தைக்கு மிகுந்த ஈர்ப்பு இருக்கிறதோ, அதை நோக்கிச் செல்லப் போகிறது. பெற்றோருடன் இருப்பதுதான் தங்களின் மிகப் பெரிய ஈர்ப்பு என்ற உணர்வை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். ஆனந்தமான, அறிவுப்பூர்வமான, அற்புதமான மனிதராக உங்களை வெளிப்படுத்திக் கொண்டால், உங்கள் குழந்தை வேறெந்தத் துணையையும் தேடிப் போகாது. எளிய விஷயங்களைக்கூட உங்களிடம் வந்து கேட்கத் தொடங்கும்.

அன்பும் ஆனந்தமும் மிக்க சூழலில் உங்கள் குழந்தைகளை நீங்கள் உருவாக்கினால், தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை. வீட்டிலோ, பள்ளியிலோ, சமூகச் சூழலிலோ துயரமான சூழலில் குழந்தை வளர நேர்ந்தால்தான் தவறுகள் நடக்கின்றன. வீட்டுக்கு உள்ளும் வெளியிலும், நாள்தோறும் கோபம், அச்சம், பரபரப்பு, பாதுகாப்பின்மை ஆகியவற்றையே குழந்தைகள் எதிர்கொண்டிருந்தால் அவர்கள் எப்படி ஆனந்தமாக வாழ முடியும்? அன்புக்கும் ஆனந்தத்துக்கும் நீங்கள் உதாரணமாய் திகழ்ந்தால், நன்மைகள் தானாக நிகழும்.

பெற்றோரின் லட்சணம் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் குணங்கள் குழந்தைகளிடையே ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி விரிவாக அலசி அதற்கான தீர்வையும் நம்மிடம் விவரிக்கிறார் சத்குரு. காத்திருங்கள் அடுத்த பகுதி விரைவில்

காதலுக்கு உயிரூட்டும் எளிய டிப்ஸ்!

காதலர் தினத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், ஆண்கள் தங்கள் காதலியையும், பெண்கள் தங்கள் காதலனையும் கவர என்னென்ன செய்யலாம் என்று இப்போதே யோசிக்க ஆரம்பித்திருப்பீர்கள்.

காதலில் விழுந்த இளசுகளுக்கு இந்த யோசனை என்றால், நமக்கு எப்போது காதல் கதவை தட்டும் என எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இந்த வருடமும் காதலர் தினத்தில் தனியே இருக்ககூடாது என்ற கவலை. இந்த வருடம் கண்டிப்பாக ஒரு துணையை கண்டுபிடிக்க வேண்டுமென்ற வைராக்கியத்தோடு ஷாப்பிங் மால்கள், தீம் பார்க்குகள், தியேட்டர்கள், கோவில்கள், பீச், பார்க், தெரு‌க்க‌‌ள் போன்ற பல இடங்களில் இளசுகளின் கூட்டம் அலைமோதும்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல், காதலில் விழுந்தவனுக்கு தான் அதிலிருக்கும் கஷ்டங்கள் தெரியும்.

காதலில் சிக்கிவிட்டால் ஒருவனின் நடை, உடை, பாவனை, குணம் என எல்லாமே ஒரு மாற்றத்திற்கு உள்ளாகும். இது அவனின் காதலியின் மனம்கவர அவன் எடுக்கும் முயற்சி. இதில் எந்த தவறும் இல்லை, ஆனால் காதல் வந்த புதிதில், காதலிக்காக எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு சில நாட்கள் கழிந்ததும் இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் அதுவே விபரீதம் ஆகிவிடும்.

காதலர்களுக்குள் என்னதான் புரிதல் இருந்தாலும், அவ்வபோது சிறு ஆச்சிரியங்களும், பரிசு பொருட்களும் அந்த உறவிற்கு நீண்ட நாட்கள் உயிரூட்டும்.

அவ்வகையில், காதலில் விழுந்திருக்கும் புதிய ஜோடிகளும், காதல் கசிந்துவிட்டதா என யோசிக்கும் பழைய ஜோடிகளும், தனிமையில் வாடியது போதுமென்று தங்களின் காதலை தேடி அலைபவர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய சுவாரஸ்யமான லவ் டிப்ஸ் இதோ..

காதலருக்கு சிறிய பரிசு கொடுத்தாலும், புதுமையான முறையில் கொடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பூச்செண்டில் 12 ரோஜாக்கள் இருந்தால், அதில் 11 சிவப்பு ரோஜாக்கள் மற்றும் ஒரேயொரு வெள்ளை ரோஜாவை வைத்து கொடுத்து, அந்த வெள்ளை ரோஜாவை போல் நீ தனித்துவம் மிகுந்தவர் என கூறுங்கள்.

காதாலருக்கு பிறந்தநாள் என்றால், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும்போது, காதலரின் பெற்றோருக்கு "நன்றி" என்று எழுதி ஒரு பூச்செண்டை அனுப்புங்கள்.

அவ்வபோது எதிர்பாராத ஆச்ச‌ரியங்கள் கொடுத்து உங்கள் துணையை திக்குமுக்காட வையுங்கள்.

முயன்றவரை ஒன்றாக நேரம் செலவழிக்க பாருங்கள். யோகா, நடை பயிற்சி, உடல் பயிற்சி ஆகிவற்றை இருவரும் ஒன்றாக செய்து பழகுங்கள். 

உங்களின் துணையை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய‌த் தயங்காதீர்கள்.

ஒரு விஷயத்தை பற்றி முடிவு செய்யும் முன் உங்களின் காதலரின் எண்ணம் என்னவென்று தெரிந்துகொண்டு செயல்படுங்கள்.

கையை பிடித்து கொள்ளுதல், தோலில் சாய்தல், செல்லமாக அடித்தல் போன்ற செய்கைகள் காதலில் மிக முக்கியமானவை என்பதை மறவாதீர்கள்.

எவ்வளவு பிசியாக இருந்தாலும் காதலுக்காக நேரம் ஒதுக்குங்கள்.

வருங்காலத்தை பற்றி இருவரும் சேர்ந்தே முடிவு செய்யுங்கள்.

ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து, மற்றவரின் எண்ணத்தை மதித்து, அன்பை பகிர்ந்து கொண்டால் இன்றைய காதலர்கள், காலம் முடியும் வரையிலும் காதலர்கள் தான். 

ஆண்கள் பெண்களுக்கு கொடுக்கும் தொல்லைகள்

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் விரும்பத்தக்க உறவாக இருப்பது காதலன், கணவன் என அவர்களது வாழ்க்கையில் வரும் ஒரு ஆணின் உறவு மட்டும் தான். அப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அங்கம் வகிக்கும் ஆண்களுக்கு, மூர்க்கத்தனம் நிறைந்த மற்றொரு பக்கமும் இருக்கிறது. 

காதலும், மூர்க்கத்தனமும் ஒரு சேர நிறைந்த ஆண்கள், தாங்கள் பெரிதும் விரும்பும் பெண்களுக்கே கூட தங்களுக்கே தெரியாமல் பலவகைகளில் கொடுமைகள் புரிவதில் வல்லவர்கள். அப்படி ஆண்கள், பெண்களுக்குச் செய்யக்கூடிய 10 கெட்ட விஷயங்களை என்னவென்று பார்க்கலாம். 

• ஆண்கள் அனைவருமே பெண்களின் மார்புகளை கடைக்கண்ணில் பார்க்கும் வழக்கமுடையவர்கள் என உலகெங்கிலும் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஆனால் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து, ‘ஜொள்' வடிக்கும் போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாவது, அவர்கள் பார்க்கும் பெண் மட்டுமல்லாது, அவர்கள் அருகில் இருக்கும் பெண்ணும் தான்! காதலியுடன் வெளியில் செல்லும் தருணங்களில் கூட, ஆண்கள் பிற பெண்களை பார்க்காமல் விடுவதில்லை! 

• அநேகமாக ஆண்கள், பெறாமை குணம் இருக்கும். பெண்கள் மிகுந்த பொறாமைக் குணம் உடையவர்கள் என குற்றம் சொல்லும் ஆண்கள், தங்கள் காதலி வேறொரு ஆணைப் பற்றி பேசினால் கூட உச்சக்கட்ட பொறாமை கொள்கிறார்கள். 

• மிகவும் சுதந்திரமான, நவநாகரீகமான பெண்ணுடன் பழகுவதே பெரும்பாலான ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தாய்க்கு அறிமுகம் செய்யும் சமயங்களில் அடக்கமான பெண்களையே விரும்புவார்கள். ஊர் சுற்றும் போது நவநாகரீகமான உடைகளை அணிவதையும், வித்தியாசமான சிகையலங்காரத்தையும் விரும்பியவர்கள், திருமணத்தின் போது மட்டும் நேர்மாறான பெண்களைத் தேடுவது தான் ஆண்களின் மோசமான செயல்களிலேயே முதன்மையானது! 

• மனைவி வீட்டை விட்டு வெளியே கால் வைத்ததிலிருந்து, "எங்கே இருக்கிறாய்?" என நச்சரித்துக் கொண்டே இருக்கும் கணவனின் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் வரும். ஆண்களின் இந்த அளவுக்கு அதிகமான அக்கறை பெண்களுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலாக மாறிவிடுகிறது. 

பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் வருவதற்கு முன்பும், இந்த உலகில் பெண்கள் கவனமாகத் தான் வாழ்ந்தார்கள் என்பதை ஆண்கள் உணருவதே கிடையாது. இதைப் படிக்கும் போதாவது சில ஆண்கள் திருந்தினால் சரி. 

• பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றாலும், ஆண்களைப் போல் அல்லாது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் விஷயங்களை செய்வதில் வல்லவர்கள். ஆண்கள் பெண்களின் உணர்வுகளை கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால், வாழ்வில் சிறப்பாக வாழ்வது நிச்சயம்.
நன்றி மாலைமலர்..

Sunday, July 21, 2013

சிந்தனைகள்

தப்பி ஓட நினைக்காதே

* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை நிறைந்த மூளை, வேலைசெய்யும் கைகள் மூன்றும் நமக்குத் தேவை.* நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.* ஒருவருக்கொருவர் நன்மை செய்வதன் மூலமாகத் தான், நற்பலன்களை அடைய முடியும்.* மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கே செல்லவும் தயாராக இருக்க வேண்டும். மரணம் ஒருநாள் உறுதி என்னும்போது நல்ல செயலுக்காக உயிரை விடுவது மேலானது.* பெரியவர்கள் பலர் செய்த தியாகத்தின் பயனையே இன்று மனிதகுலம் அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலகம் முழுவதிலும் காணமுடியும்.* உன் சொந்த முக்திக்காக நீ உலகத்தைத் துறந்து விட விரும்பினால் அது ஒன்றும் பாராட்டத்தக்கது அல்ல. ஆனால், உலக நன்மைக்காக உன்னை நீயே தியாகம் செய்ய முடியுமானால் கடவுளாகி விடுவாய்.* உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்காதே. தியாக உள்ளத்துடன் சேவையில் ஈடுபடு. விவேகானந்தர்

நீங்கள் நல்லவர் தான்


* சமயம் என்கிற கறவை மாடு பல தடவை உதைத்திருக்கலாம். ஆனால், அதை நாம் பொருட்படுத்த வேண்டாம். ஏனென்றால் அது நமக்கு நிறைய பால் தருகிறது. பால் கொடுக்கும் பசுவின் உதையைப் பால்காரன் பொருட்படுத்த மாட்டான்.* நாம் அனைவரும் ஒளி தரும் விளக்குகள். விளக்கு எரிந்து ஒளி காட்டுவது தான் நம் வாழ்க்கை என கொள்ளப்படுகிறது. * கடவுளிடம் ஒன்றையும் வேண்டாதீர்கள். வேண்டுதல் ஒரு பலவீனம். இதனால், நாம் பிச்சைக்காரர்களாகி வருகிறோம். நாம் அனைவரும் ராஜகுமாரர்கள் என்பதை உணர்ந்து கொள்வோம்.* பலவந்தமாகச் செய்யப்படும் சீர்திருத்த முயற்சிகள் எப்போதும் பயன் தருவதில்லை. நீங்கள் அனைவருமே நல்லவர் தான். இன்னும் நல்லவராக முயலுங்கள்.* அன்பு ஒருபோதும் பிறரைக் குறை கூறுவதில்லை. பேராசை தான் பிறரைக் குறை சொல்லி மகிழ்கிறது. அதில் நேர்மையோ நியாயமோ இருப்பதில்லை. எனவே ஆசையை ஒதுக்குங்கள்.- விவேகானந்தர்

எது வந்தாலும் போராடு

* உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவை தான் செய்ய முடியும். உயிர்களுக்கு தொண்டு செய்பவன் கடவுளுக்கே தொண்டு செய்தவன் ஆவான்.* நீ செல்லும் பாதை, கத்தி முனையில் நடப்பது போல மிகவும் கடினமானது தான் என்றாலும், மனம் தளராமல் குறிக்கோளை நோக்கி முன்னேறு.* தோல்வியைத் தழுவி உயிர்வாழ்வதை விடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.* மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.* ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். மூளை, தசை, நரம்பு என உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும்.* எது வந்தாலும் போராடிக் கொண்டிரு. கோழையாவதனால் நீ எந்த ஒரு பயனையும் பெற மாட்டாய்.விவேகானந்தர்

Saturday, July 20, 2013

மனைவி பாராட்ட வேண்டுமா?

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். கணவர் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவியும் ஒரு பெண் அவருக்கும் உணர்ந்து அவரிடம் அன்பாக நடத்து கொள்ள வேண்டும். 

தினமும் வேலையில் நடக்கும் விஷங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். மனைவி தான் விட்டு கொடுத்து போக வேண்டும் என்று நினைக்காமல் சில விஷயங்களை மனைவிக்காக விட்டு கொடுத்து பாருங்கள் குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். 

• மனைவியைக் கவுரவமாக நடத்துங்கள். 

•  வெளியில் எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புகிவீர்கள் என்பதைச் சொல்லிவிடுங்கள் 

•  ஆடம்பர செலவுகளைக் குறையுங்கள் 

•  மனைவிக்கு அவசர செலவுகளுக்கு சிறிது பணம் கொடுங்கள் 

•  உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு அவரிடம் விவாதியுங்கள் 

•  அவர் தனது பிரச்சனைகளை உங்கள் செவியில் போட்டால் மனதார காது கொடுத்து கேளுங்கள் 

•  வருங்காலத்துக்கு ஒரளவு பணம் சேமித்து வைக்க பாருங்கள் 

•  குழந்தைகளைப் பற்றிய சிந்தனை சதாநேரமும் உங்களுக்கு இருக்கட்டும் 

•  பயணங்களால் மனைவியைப் பிரியும்போதும் வீட்டுக்குள் வரும் போதும் முத்தமிடுங்கள் அல்லது புன்னகையாவது பூத்தல் அவசியம் 

•  இவைகளை மறவாமல் கடைப்பிடித்து வந்தால் மனைவி உங்களை ஆஹா...ஓஹோ என புகழ்வது உறுதி

கணவரின் அன்பு உண்மையானதா என்று அறிய

அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டு தான் இருப்போம். அவ்வாறு தேடும்போது நிறைய பேரிடம் பழக வேண்டிய நிலை இருக்கும். அந்த நேரத்தில் ஒருவரின் பழக்க வழக்கங்கள் பிடித்துவிடும், பின்னர் அவருடன் சந்தோஷமாக, சண்டையின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பதுபோல் இருக்கும். 

ஆனால் உறவில் என்ன தான் சரியான துணையாக அமைந்து விட்டாலும், ஒரு சில செயல்கள் இருக்க வேண்டும். அவை இல்லாவிட்டால், அந்த உறவு போலியானது. சொல்லப் போனால், உண்மையான உறவில் அனைவரும் எப்போதும் சரியாக இருக்க முடியாது. அத்தகைய உண்மையான உறவில் சண்டைகள், அகங்காரம், விவாதம் போன்றவைகள் இருக்கத்தான் செய்யும். ஏனெனில் அவை இயற்கையானவை. 

அத்தகைய இயற்கையான சில செயல்கள் கூட, பழகும் துணையிடம் இல்லாவிட்டால், அந்த உறவை போலியானது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் போலியான உறவில்தான் எந்த ஒரு பிரச்சனையும், அக்கறையும் இல்லாமல் இருக்கும். சரி, இப்போது நீங்கள் துணையாக நினைத்து பழகும் போலியான அன்பு கொண்டவர் என்பதை அறிய சில அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ளலாம். 

• அளவுக்கு அதிகமாக அன்பை வெளிப்படுத்துவது என்பது தவறில்லை. ஆனால் அத்தகைய அன்பை பொது இடங்களில் வெளிப்படுத்துவது தான் தவறானது. உண்மையில் காதல் செய்யும் எவரும், அன்பை பொது இடங்களில் வெளிப்படுத்த மாட்டார்கள். அன்பு என்பது ஒருவரது மனதில் இருந்தால், போதுமானது. அத்தகைய அன்பை மற்றவர் பார்க்கும் வகையில் பொது இடங்களில் வெளிப்படுத்துவது போலியான உறவைக் குறிக்கும். 

• உண்மையான உறவில் ஆலோசனைகள் இருக்கும். அவ்வாறு ஆலோசனை செய்யும் போது இருவரும் ஒவ்வொரு புள்ளியிலிருந்து யோசித்து பேசுவோம். ஆனால் விவாதமானது எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது வேலைபற்றியோ இல்லாமல், வெறும் கூந்தல், ஆடை போன்றவற்றைப் பற்றியே இருந்தால், அது உறவை போலியானது என்று காட்டும். 

• துணையின் விருப்பமான படம், ரெசிபி, நிறம் மற்றும் மறக்க முடியாத நிகழ்வு போன்றவை தெரியுமா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் இருந்தால், அவர்/அவள் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை யென்றும், மேலும் அது உண்மையான அன்பு இல்லை என்றும் தெரிவிக்கிறது. 

• சண்டைகள் மற்றும் வாதங்கள் இருந்தால் தான், உறவு நன்கு வலுவாக இருக்கும். ஆனால அத்தகையது எதுவும் இல்லாமல் எந்நேரமும் சாதாரணமாக இருந்தால், அது வாழ்வில் சுவாரஸ்யத்தை குறைந்து, உறவை போலியானது போல் காட்டும். 

• எந்த ஒரு நட்போ அல்லது காதலோ கிடைத்தாலும், முதலில் அவர்களது குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஆனால் போலியான உறவு இருந்தால், அத்தகையவர்களை சந்திக்க விருப்பமில்லாமல், அடிக்கடி வேலை உள்ளது என்று ஓடி விடுவார்கள் 

• துணையாக இருப்பவர்கள் இரகசியத்தை மறைப்பது, அவர்களது கண்களில் நன்கு தெரியும். உண்மையான உறவில் இரகசியங்கள் என்ற ஒன்று இருந்தால், அதுவும் போலியானது தான். எப்போதும் நெருக்கத்துடன் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. 

நெருக்கமானது, அவர்கள் மனம் வருந்தும் போது, சமாதானப்படுத்துவதற்கு நெருக்கமானது வேண்டும். ஆனால் அது சுத்தமாக இல்லாவிட்டால், பின் அது நிச்சயம் உண்மையான உறவாக இருக்க முடியாது.

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்

இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும். 

பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். அத்தகைய குணங்கள் என்னவென்று பார்க்கலாம்..... 

• பெண்கள் கெட்ட வார்த்தையை அதிகம் பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள். 

• நிறைய பெண்களுடன் தொடர்புடைய ஆணுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்பதாலேயே. 

• பெண்களுக்கு தினமும் குடிக்கும் ஆண்களை பிடிக்காது. ஏனெனில் அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்ற காரணத்தால் தான். 

• தனிமையில் இருப்பது, இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் தான். அதற்காக எப்போதுமே இருவர் மட்டும் தான் எங்கும் செல்ல வேண்டும், இருக்க வேண்டும் என்று நினைத்தால், அது மிகவும் கொடுமையாக இருக்கும். எனவே இத்தகைய குணமுள்ள ஆண்களையும் பிடிக்காது. 

• பெண்கள் சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும். 

• பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும். 

• ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். பெரும்பாலான ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. 

• ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது. 

• சில ஆண்கள் எப்பொழுதும் வேலையை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பார்கள். வீட்டில் இருக்கும் போதும், மனைவியுடன் வெளியில் செல்லும் போதும் வேலையை பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும். எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருக்கும் ஆண்களை கண்டால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

ஆண்கள் வெறுக்கும் பெண்களின் சில செயல்கள்

பெண்கள் செய்யும் சில செயல்கள் ஆண்களுக்கு பிடிக்காது. உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத சில செயல்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* பெண்கள் வெளியே கிளம்ப வேண்டுமெனில் குறைந்தது 1 மணிநேரம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதால், ஆண்கள் வெறுப்படைந்துவிடுவார்கள். 

* பெண்களின் செயல்களில் முக்கியமான ஒன்று மேக்-கப் போடுவது. பெண்களுக்கு எங்கு செல்லும் போதும், நன்கு அழகாக பொலிவோடு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்கள் இயற்கை அழகையே விரும்புபவர்கள். சொல்லப்போனால் மேக்-கப் போடும் பெண்களை விட, மேக்-கப் போடாத பெண்களாலேயே ஆண்களை எளிதில் கவர முடியும். 

* பெண்களுக்கு எவ்வளவு தான் வீட்டில் துணிகள் இருந்தாலும், புது ஆடைகள் வாங்குவதில் உள்ள நாட்டம் குறையாது. அதிலும் ஒருமுறை மனதில் வாங்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், என்ன வாங்க வேண்டும் என்று யோசிக்கவே 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த நேரம் மட்டும் ஆண்கள் பெண்கள் கைகளில் மாட்டிக் கொண்டால், பொறுமையையே ஆடையாக அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், சண்டைகள் வந்து வீடே இரண்டாகிவிடும். 

* இயற்கையாகவே பெண்களுக்கு சுய அன்பானது அதிகம் இருக்கும். மேலும் எந்த நேரமும் நன்கு அழகாகவே காணப்பட வேண்டும் என்று அழகு மீது அதிக கவனம் கொள்வார்கள். அதனால் தான் அவர்கள் மேக்-கப் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர்.  

ஆனால் அவ்வாறு மேக்-கப் நமது துணைக்கு பிடிக்கிறதா என்று பார்த்து செய்வது நல்லது. ஏனெனில் அவர் தான் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள். ஆகவே அதை மறக்காமல் நடப்பது நல்லது. 

மேற்கூறிய விஷயங்களை பெண்கள் தவிர்த்தால் நிச்சயம் அனைத்து ஆண்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

Thursday, July 18, 2013

கோபத்தால் வரும் பிரச்சனைகள்

1.நமது சொல்லை பிறர் ஏற்காதபோது அல்லது சொல்லியும் கேளாதபோது. 

2.பிறர் நம்மிடம் குறை காணும்போது 

3.பிறர் நம்மை அவமானத்திற்குள்ளாக்கும் போது 

4.நமது விருப்பப்படி காரியங்கள் நடக்காத போது. 

5.களைத்துப் போய் வீடு திரும்புகையில் உணவு சரியில்லாதபோது 

6.குழந்தைகள் தொந்தரவு கொடுக்கும்போது 

7.நமது மனதில் பொறாமை, வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம் இருக்கும்போது. 

8.பிறர் நம்மீது காரணத்தோடோ அல்லது அனாவசியமாகவோ கோபிக்கும் போது 

9.தூக்கத்தைக் கெடுக்கும் போது 

10. நமது அவசர வேலையில் பிறர் இடைஞ்சல் செய்யும்போது. 

11.பிறர் பொய் பேசும்போது 

12.நமது பெருந்தன்மையை, பிறர் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் போது. 

13.நோய்வாய்ப்படிருக்கையில், சரியான உபசரிப்பு கிடைக்காதபோது கோபத்தால் புத்தி பேதலிக்கிறது. 

அறிவின் பிரகாசம் மங்கிவிடுகிறது. குளுமை குறைந்து அமைதி குன்றி விடுகிறது. இரத்த ஓட்டம் பாதிக்கிறது. கோபமிருந்தால் ஒருபோதும் இறையுணர்வை அனுபவிக்க முடியாது. கட்டுப்பாடு தவறி விடுவதால் எந்த ஒருவேலையையும் திறமையாகச் செய்ய முடியாது. 

உள்ளுக்குள் சூட்சுமமாக அடங்கியிருக்கும் பொறாமை மற்றும் பலவீனத்தின் அறிகுறியே கோபமாகும். இதனால் உறவு கெடும். குடும்பத்திலும் காரியாலயத்திலும் சுமுக நிலை பாதிக்கப்படும். 

அதிருப்தி நிலவும், பிறருக்கு அறிவுரை கூற முற்படுபவர், ஆனால் பிறர் சொல்லைக் கேளார். இதனால் தானும் துன்புறுவதோடு, பிறரும் இவரால் துன்புறுவர். இத்தகையோருக்கு வாழ்வில் அமைதி எப்படி கிட்டும். மொத்தத்தில் வாழ்வே காய்ந்து போய் விடும்.

பெண்களின் அன்பை பெற வழிகள்

பெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும அறிந்து கொள்ள முடியாது. ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெண்களின் வாடிக்கை. 

• பெண்கள் விரும்புவது பாதுகாப்பு உணர்வைதான், தந்தை, கணவர், மகன், என எந்த ஆணாக இருந்தாலும் தனக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல தோள் சாயும் போது தோழனாகவும், மடி சாயும் போது தாயுமானவனாகவும் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே பெண்களின் மனதில் இடமுண்டு. 

• பெண்களை சந்திக்கும் போது தோற்றத்தில் கவனம் தேவை. முதன் முதலில் உங்களைப் பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்குவது அந்த தோற்றம்தான். பெண்களின் மனதைக் கவர ஸ்மார்ட் லுக் அவசியம் என்கின்றனர் அனுபவசாலிகள். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். 

• பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி. 

• எப்பொழுதாவது பேசுவதைவிட அடிக்கடி விசாரியுங்கள். தனிப்பட்ட முறையிலோ, குடும்ப ரீதியாகவோ பேச்சு இருக்கட்டும். அடிக்கடி அவர்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். பெண்களுக்கு உணர்வு ரீதியான செயல்பாடுகள் பிடிக்கும். அதை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் ஆண்களுக்கு பெண்களின் மனதில் எப்போதும் இடமுண்டு. 

• எதையும் வெளிப்படையாக பேசுங்கள். மனதில் கல்மிஷம் இல்லாத பேச்சும், கண்களுக்கு நேராக அதை தெரிவிக்கும் ஆண்களை தான் பெண்களும் அதிகம் பிடிக்கும்.. எப்பொழுதும் ஜென்டில் மேன் செயல்பாடுகளுடன் நடந்து கொள்ளும் ஆண்களால்தான் எளிதில் பெண்களின் இதயத்தை கவரமுடியும். 

• பெண்களைக் கவருவதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும். 

• பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். 

- இதுபோன்ற செயல்பாடுகளால் மட்டுமே பெண்களின் மனதை கவர முடியும்..
நன்றி மாலைமலர்

உலகிலேயே மிகவும் அழகான உறவு

உலகிலே மிக அழகான உறவாக வர்ணிக்கப்படுவது அம்மா- மகளுக்கு இடையே நிலவும் அன்பான உறவுதான். மகள்கள், அம்மாக்களை ரோல் மாடலாக ஏற்றுக்கொள்கிறார்கள். அம்மாக்கள் போட்டுக்கொடுக்கும் வாழ்க்கை மேப்பை வழிகாட்டியாகக் கொண்டுதான் மகள்கள் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

அந்த உறவை இன்னும் கொஞ்சம் மேம்படுத்த சில வழிகள் இருக்கின்றன. என் அம்மாவைப்போல் இந்த உலகத்தில் சிறந்த தோழி வேறு யாரும் இல்லை. எந்த கவலையையும் தீர்க்க என் அம்மாவின் மடி எனக்கு இருக்கிறது. எந்த மன பாரத்தையும் இறக்க என் அம்மாவின் தோள்கள் எனக்கு இருக்கின்றன என்று மகள் நினைக்கும் அளவுக்கான பந்தத்தை அவளது குழந்தைப் பருவத்திலே தொடங்கிவிடுங்கள். 

5 வயதில் அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு அவர் சொல்வதை எல்லாம் கேட்கும் மகள் 15 வயதில் எதிரிபோல் சீறுவாள். பின்பு 25 வயதாகும்போது மீண்டும் அம்மாவின் மடிக்கே திரும்பிவருவாள். அதனால் சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டாலும் வார்த்தைகளில் மகளை வறுத்துவிடவேண்டாம். 

அதனால் குறைந்த நேரம் பேசுங்கள். ஆனால் அது அன்பு கலந்த, நிபந்தனைகளற்ற பேச்சாக இருக்கட்டும். பேசிக் கொண்டே இருக்கவேண்டியதில்லை. அருகில் அமருங்கள். ஒன்றாக டி.வி.பாருங்கள். சினிமாவுக்கு செல்லுங்கள். 

விளையாடுங்கள். நடிகை ஒருவரை சினிமாவில் பார்த்துவிட்டு, அதுபோல் தன் தாய் எப்போதும் அன்பை பொழிவாள் என்று மகள் எதிர்பார்க்கக்கூடாது. அது போல் மகளை என்றும் கைக்குழந்தைபோல் நினைப்பதும், தான் கீ கொடுத்தால் ஓடும் பொம்மை என்றும் அம்மா நினைத்துவிடக் கூடாது. 

அம்மா தாயும் - மகளும் மனம் விட்டுப்பேச வேண்டும். இருவரும் இரு தலைமுறையை சேர்ந்த சுதந்திர மனிதர்கள் என்ற எண்ணத்தை எப்போதும் மனதில் வைத்திருக்கவேண்டும். அப்படி நினைத்தால் தான் பிணக்கு குறைந்து இணக்கம் ஏற்படும்.
நன்றி மாலைமலர்

Sunday, July 14, 2013

தாம்பத்தியம் இனிக்க வழிமுறைகள்

தாம்பத்தியம் கசந்தால் வாழ்க்கையே சிதைத்துவிடும். தாம்பத்தியம் சிறப்பதற்கான சூத்திரங்கள் மிக எளிமையானவை. தம்பதியர் இருவரும் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, அப்போதைய சூழ்நிலையை இன்பமாக புதுப்பித்துக் கொள்ளுங்கள். 

உங்கள் கனவுகள், லட்சியங்கள், எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை வாழ்க்கைத் துணையிடம் கூறி, அதற்கு அவரிடம் இருந்து கிடைக்க வேண்டியது அன்பு, அரவணைப்பும் தான் என்பதை நினைவுபடுத்துங்கள். நீங்களும் இதை திருப்பிக் கொடுக்க கடமைப்பட்டுள்ளதை உறுதியளியுங்கள். 

துணையின் குறிக்கோள் எதுவாக இருந்தாலும், அதை குறைகூறாதீர்கள். உங்களின் நெருங்கிய உறவுகள், நட்புகளை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பதைப் போல, வாழ்க்கைத்துணை சார்த்தவர்களையும் மரியாதை செய்யுங்கள். இது பரஸ்பர அன்புக்கு வழிவகுக்கும். 

அவர்கள் முன் வாழ்க்கைத்துணையை மட்டம் தட்டிப் பேச வேண்டாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்காக மிக அதிகமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நோய் மற்றும் வேறு ஏதாவது கவலையில் வாழ்க்கைத் துணை இருந்தாலும்....ஆறுதல் வார்த்தை கூறத் தவறாதீர்கள்.

பெண்களே! சந்தோஷமாக இருக்க காதலிக்காதீங்க

காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. காதலில் விழுந்துவிட்டால், சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும், காதலனிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். எனவே திருமணம் செய்வதற்கு முன், காதலில் விழாமல் இருந்தால், பிடித்த அனைத்தையும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு, ஜாலியான வாழ்க்கையை வாழலாம். 

அதிலும் பெண்கள் வெட்கப்பட்டு, அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்த காலம் எப்போதோ மாறிவிட்டது. தற்போது பெண்களும் அனைத்தும் அவர்களது விருப்பத்துடன் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். குறிப்பாக தற்போதுள்ள பெண்களுக்கு சுதந்திரம் அவசியமாகிவிட்டது. பெண்கள் காதலில் விழாமல் இருந்தால், எந்த மாதிரியான சந்தோஷத்தை அடையலாம் என்று பார்க்கலாம்.... 

• காதல் செய்யாமல் இருந்தால், எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும் யாரிடமும் அனுமதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை. நினைத்ததை எந்நேரத்திலும் பயமின்றி, தடையின்றி செய்யலாம். நாம் செய்யும் செயல் காதலருக்கு பிடிக்கவில்லை என்றால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட வழிவகுக்கும். 

• பெண்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்களுக்கு அதுவே பொழுதுபோக்காக இருக்கும். எனவே தனி ஒரு பெண்ணாக இருந்தால், எந்நேரமும் சந்தோஷமாக ஷாப்பிங்கிலேயே இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு ஷாப்பிங் என்றால் பிடிக்காது. ஏனொனில் பர்ஸ் காலியாகி விடும் என்று நினைப்பார்கள். 

• காதல் செய்யாமல் இருந்தால், அலுவலகத்தில் நல்ல ஆர்வத்துடன் வேலை செய்யலாம். அதிலும் அலுவலகத்தில் கொடுத்துள்ள இலக்கை அடைய எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்ய முடியும். 

• காதல் வந்துவிட்டால் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே முடியாது. ஆனால் காதலில் மட்டும் விழாமல் இருந்தால், நண்பர்களுடன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சந்தோஷமாக செலவழிக்கலாம். 

• சில ஆண்கள், தங்களது காதலியை அவர்களது ஆண் நண்பர்களுடன் பேசவே அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், அதுவே தனி ஆளாக இருந்தால், எப்போது வேண்டுமானாலும், ஆண் நண்பர்களுடன் பேசலாம்.
நன்றி...மாலைமலர்

டீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங்கள் என்ன?

வளர்ந்து வரும் குழந்தைகள் `டீன் ஏஜ்' பருவத்தை அடையும்போது, பெற்றோர் என்ற முறையில் அவர்களைப் பற்றி கவலை ஏற்படுவது இயற்கை தான். அவர்களது மனம், உடல், எண்ணம் ஆகியவற்றைப் பாதிக்கும் விஷயங்கள் ஏராளம் உள்ளன.

மேலும் அவர்களால் பெற்றோர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் ஏராளம். கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் அதிகம். அவற்றை எதிர்கொள்ளவும், முன்கூட்டியே காத்துக்கொள்ளவும், எதிலிருந்து தொடங்குவதுப எப்படித் தொடங்குவது? எப்படிக் கையாள்வது? என்பதை பற்றி பார்ப்போம்.

இன்றைய காலத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பி விட்டு மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறோம். நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப்பார்த்து நமக்கு பயமாக இருக்கிறது. தற்போது உள்ள குழந்தைகளுக்கு நாம் சிறு வயதில் கற்றுக்கொண்ட விஷயங்களை விட அதிகமாக கற்றுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

யார் மூலமாகவோ சில விஷயங்கள் தவறாக போதிக்கப்படுவதை விட, அதன் விளைவாக தவறான நடவடிக்கைகளுக்கு அவர்கள் சென்று தவறான முடிவுகள் எடுப்பதை விட, பெற்றோர்களே அவர்களுக்கு அவற்றை நாசூக்காக சொல்லிக்கொடுத்தால் நல்லது. டீனேஜ் குழந்தைகளிடம் கருத்துப்பரிமாற்றம் செய்ய வேண்டிய அடிப்படையான விஷயங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம். இவ்விஷயங்களை பற்றி குழந்தைகளிடம் மென்மையாகப் பேசலாமே!

பாலுறவு மற்றும் பாலியல்..........

வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஊடகங்கள் வாயிலாகவோ, நண்பர்கள் மூலமாகவோ அல்லது தற்செயலாக ஏற்படும் அனுபவங்கள் வாயிலாகவோ, பாலுறவு மற்றும் பாலியல் தொடர்பான விஷயங்கள் தெரியவர வாய்ப்புள்ளது.

எனவே கருத்தடை, தேவையில்லாத கர்ப்பம், கருக்கலைப்பு முதலிய விஷயங்கள் குறித்து டீனேஜ் குழந்தைகளிடம் சொல்லி வைப்பதுடன், அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும், ஒருவரை முறையுடன் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்தும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

போதை மருந்துகள், மதுபானங்கள்.........

ஒரு மனிதனாக வளர்ந்து வருகிறோம் என்பதை அறிந்து கொள்ளும் வயதில் உயர் நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது உடன் பயிலும் நண்பர்களுடன் ஜாலியாகப் பார்ட்டியில் கலந்து கொள்வார்கள். பார்ட்டிகளில் கலந்து கொள்வதில் அவர்களுக்கு நிறைய விருப்பம் இருக்கும்.

அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு போதை மருந்துகள், மது பானங்கள் மற்றும் இதர போதையேற்றும் பொருட்களை யாராவது அறிமுகப்படுத்தலாம். அவர்களது நண்பர்கள் பல் வேறு சமூகப் பின்னணியை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு இதெல்லாம் மிகச் சாதாரணமான விஷயங்களாக இருக்கும்.

அத்தகைய நண்பர்களின் வற்புறுத்தலால் இவற்றை குழந்தைகள் உட்கொள்ள வாய்ப்புண்டு. எனவே குழந்தைகளுக்கு இவற்றைப் பற்றிச் சொல்லி சரியாக வளர்க்க வில்லையென்றால், அவர்கள் இதனை ஜாலிக்காகச் செய்கிறேன் என்று ஆரம்பித்து, பின்னர் அடிமையாகி விடுவார்கள்.

குழந்தைகள் இதுபோன்ற பார்ட்டிகளுக்குச் செல்கிறார்கள் என்று தெரிய வந்தால் உடனே அவர்களை அழைத்து இது குறித்து அவர்களுக்கு சொல்லி வைக்க வேண்டும். போதுமான அறிவுரைகளை மட்டும் கூறுங்கள். இது மிகவும் அவசியமானது.

பணத்தை கையாளுதல்...........

குழந்தைகள் உழைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றால் அதன் அருமை, மதிப்பு எல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அவற்றை எப்படி சேமிக்க வேண்டும் என்றும், அது எப்படி பிற்காலத்தில் உதவும் என்றும் தெரிந்திருக்கும். ஆனால், பணம் சம்பாதிக்காத குழந்தைகளுக்கு, அதன் அருமை தெரியாது.

செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். பணம் சம்பாதிக்க பெற்றோர்கள் படும் கஷ்டம் அவர்களுக்குத் தெரியாது. இந்த மாதிரியான குழந்தைகளிடம் பணத்தின் மதிப்பு பற்றியும், சேமிப்பின் அவசியம் மற்றும் சேமிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும். அது முதன்மையான வேலையாக இருக்கட்டும்.

குடும்பத்தின் மேன்மை.........

டீனேஜ் பருவத்தினருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். பாடங்கள், பாடம் தொடர்பான குறிப்பெடுத்தல், புராஜெக்ட், நண்பர்களூடன் அரட்டையடித்தல், பார்ட்டிகளுக்கு செல்லுதல், கிரிக்கெட் விளையாடுதல் போன்ற பல வேலைகளுக்கிடையில், அவர்கள் வீட்டில் இருப்பது குறைவு.

அப்படி வீட்டில் இருந்தாலும், குடும்பத்திலுள்ள மற்றவர்களுடன் பேசி மகிழ்வதும் குறைவாகவே இருக்கும். அவர்களது இளமை வேகத்தில் வீட்டில் அமைதியாக இருக்க அவர்களுக்குப் பிடிக்காது. நேரம் கிடைக்கும் போது, குடும்பத்தின் மேன்மை மற்றும் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு இதமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

குடும்பத்தினரிடையே எப்படி அன்பாக, பாசப்பிணைப்புடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும், வீட்டில் நடைபெறும் சிறுசிறு சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

டேட்டிங்.........

துணைவரை அடிக்கடி மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை என்றும், உறவுகளை முறித்துக் கொள்வது சகஜம்தான் என்றும், நம்முடன் உறவாக இருப்பவர்களை ஏமாற்றுவது பெரிய தவறு ஒன்றும் இல்லை என்றும் டீனேஜ் பருவத்தினர் நினைத்துக் கொள்கிறார்கள்.

இந்த மாதிரியான தவறான எண்ணங்களுடன் குழந்தைகள் வளர்வதற்கு இடம் கொடுக்காமல், நட்பு மற்றும் உறவுகளின் மேன்மை பற்றியும், முக்கியத்துவம் பற்றியும், அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் ஒரு நண்பனாக அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இணையதளத்தில் உலவுதல்............

தற்போதுள்ள இளைஞர்கள் இணைய தளம் வழியாக ஆன்லைன் சாட்டிங், ஃபேஸ்புக் வழியாக கருத்துப்பரிமாற்றம், நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றை விரும்புகிறார்கள். இத்தகைய ஆன்லைன் உறவுகள், அவர்களது எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதை மறந்து போகலாம்.

அவர்கள் இணையதளம் வழியாக என்னென்ன நடவடிக் கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை பெற்றோர்களால் கண்காணிக்க முடியாமல் போனாலும் கூட, இவ்வித ஆன்லைன் நடவடிக்கைகள் அவர்களது எதிர்காலத்தினை எவ்வாறு பாழ்படுத்தக்கூடும் என்பது குறித்த விழிப்புணர்வினை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மேலும் இதுகுறித்து நாளிதழ்களில் வரும் செய்திகளை, அவர்களது கவனத்திற்குக் கொண்டு வந்து, அது குறித்த அச்சத்தினை ஏற்படுத்த வேண்டும்.

வெற்றியின் ருசி...........

குழந்தைகளிடம் வெற்றி என்றால் என்னவென்றும், அது குறித்து அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேட்க வேண்டும். கல்வி, விளையாட்டு அல்லது அவர்கள் விரும்பும் வேறு ஏதாவது துறை ஆகியவற்றில் அவர்கள் சாதிக்க வேண்டியவை, வாழ்க்கையில் ஒரு லட்சியம் அல்லது குறிக்கோள் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு, அதனை நோக்கிப் பயணித்தல் போன்ற விஷயங்கள் குறித்து, அவ்வப்போது பெற்றோர்கள் பேச வேண்டும்.

வேண்டுமெனில் தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் துறையில் சாதிக்க வேண்டியவை குறித்தும் பேசலாம். `வரலாறு படித்தல் நல்லது தான். ஆனால் வரலாறு படைத்தல் அதனினும் நல்லது' என்றும் கூற வேண்டும். அவர்களது மனதில் "பத்தோடு பதினொன்றாக'' என்று இல்லாமல், வெற்றி வீரனாக தனியாகத் தெரிவதன் பெருமையை பெற்றோர்கள் எடுத்துக் கூற வேண்டும்.

அறிவுரை வார்த்தைகள் அவர்கள் மனதில் பதிந்து, அவர்களது வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு நினைவுக்கு வர வேண்டும். வாழ்வின் அனைத்து கஷ்ட, நஷ்டங்கள், நன்மை, தீமைகளை பிள்ளைகள் நன்கு உணறுமாறு பெற்றோர் எடுத்து கூறவேண்டும்.
tamil matrimony_INNER_468x60.gif
நன்றி ..மாலைமலர்

வாழ்வில் வெற்றிக்கான வழி

எந்த ஒரு விஷயத்திலும் மனிதன் வெற்றியைப் பெறுவதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார். அவர் போதித்த வெற்றிக்கான வழியை இங்கு பார்க்கலாம். 

* பட்டினி கிடக்காதீர்கள். 

* மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள். 

* சோம்பலை துரத்தி அடியுங்கள். 

* சந்தேகமும், சஞ்சலமும் எதிரிகள், அவற்றை அண்ட விடாதீர்கள். 

* அதிக நேரம் உறங்காதீர்கள். 

* மிக குறைவாகவும் உறங்காதீர்கள். 

* பொறாமை அறவே இருக்கக் கூடாது. 

* உடல் தூய்மை அவசியம், ஆகையால் தினமும் நீராடுங்கள். 

* பேராசை படாதீர்கள். 

* மகிழ்ச்சியாக இருங்கள். 

* நல்லதையே நினைத்து வாருங்கள். நல்லவையே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு. 

* தைரியமாக இருங்கள். 

* பொறுமையும், விடாமுயற்சியும் நல்ல நண்பர்கள். எப்போதும் இவர்களுடனே இணைந்திருக்க பழகுங்கள்
நன்றி
தினமலர்

Monday, July 8, 2013

குறிஞ்சிமலர்....

வாணி அழகிலும் அறிவிலும் தன்னடக்கத்திலும் தன்மானம் காப்பதிலும் சிறந்தவள். ஆனால் வறுமை அவள் வாழ்வில் தடைக்கல்லாய் அமைத்தது. அப்பா குடிகாரன் என்பதால் அம்மா தள்ளியே வைத்துக்கொண்டாள் ஆனால் தன்மகளை யாரிடமும் கையேந்த விடாது  சின்னச்சின்ன வருமானத்தைத்
தேடிதேடி படிக்கவும் வைத்தாள் எப்பவும் உழைக்கும் அம்மாவை பார்த்தே
வளர்ந்ததால் அவளுக்கு அப்பாவில் பெரிதாய் பாசம் என்றஒன்றுஇல்லை
ஆனால் மற்றவர்கள் போல் அம்மாவைஅடிப்பதில்லை அது அவளுக்கு ஒர் நின்மதி.
வாணியின் வீட்டிற்கு பக்கதில் சிந்துவீடு வசதியிலும் வாழ்விலும் உயரத்தே இருந்தார்கள். ஆனால் வாணிமீது எல்லோரும் பாசம். தங்கள்  வீட்டுமகளைப்போலவே அவளையும்நேசித்தார்கள். வாணிக்கு சொந்தமும் உறவு சிந்துவும் அவளின் மூன்று அண்ணாக்களும் தான் எப்பவும் அவர்கள் வீட்டில் தான் நிற்பாள், வீட்டில் இல்லை என்றால் தாய் அங்குதான் தேடிப்போவாள் ,அப்பா இருந்தும் இல்லாத மாதிரி வாழ்ந்தாலும் .நன்றாக படித்தாள், நண்பியுடன் சேர்த்தே திரிவாள் இருவரையும் எல்லோரும் கிண்டல் அடித்தாலும் பிரியமாட்டார்கள்.நன்றக படித்தால் உயர்தர பரீட்சையில் வெற்றியும்அடைத்தாள்.ஆனால் மேலபடிக்காது நின்றுவிட்டாள் அம்மாவின் கஸ்ரம் அவளை மேல படிக்க விடாது தடுத்தது.சிந்துவின் தாய் தொடர்த்து படிக்கச்சொல்லி வற்புறுத்தியும் அவள் மறுத்துவிட்டாள். தாங்கள் படிப்பதற்கு உதவி செய்வதாக சொல்லியும் பிடிவாதமாய் மறுத்தே விட்டாள் உதவி என்றாலும் காரணமின்றி கிடைப்பது பிடிக்காமல்.நண்பி பெரிதாய் படிக்காத காரணத்தால்  அவளும் நின்றுவிட்டாள்
சிந்துவின் கடசி அண்ணாவிற்கு மட்டும்  எல்லோரைவிடவும் வாணியிடம் பிரியம் அதிகம். அதை யாரும் பெரிது படுத்தவுமில்லை.

சிந்துவின் மூத்தஅண்ணா வெளிநாடுசொல்ல அவரை தொடர்ந்து எல்லா அண்ணன்களும் சென்றுவிட இருவீடும் மகிழ்வாய் இருந்தது எப்பவும் சிந்துவின் பிறந்ததினம் வந்தால் வெளிநாட்டு பார்சல் வரும் அதற்குள் வாணிக்கும் கட்டிப்பாய்  ஏதோ ஒன்று இருக்கும் .ஆனால் யார் வைத்தது என்று சிந்துவிற்கு மட்டும் தெரியும் வாணியிடம் கூட சொல்வதேஇல்லை  ஏன்னென்றால் சிந்துவிற்கு வாணியை நன்றாக தெரியும் ,அதனால் பொதுவாக அண்ணாக்கள் வேண்டி அனுப்பியது என்று கூறுவாள்
.எப்படிதான் சிந்துவும் அவள் குடுபவும் பாசம் காட்டினாலும் அவளுக்கு தாய்யின் கஸ்ரம் தான் பெரிதாய் தெரித்தது ,கூலிவேலைக்கு போக வெளிக்கிட்டால் சிந்துவிடுவது இல்லை, அதனால் அவளால் ஒன்றும் செய்யமுடியாது இருந்தது .வாணிக்கே தெரியாது வாணியின்அம்மாவிடம் கொஞ்சபணத்தை கொடுத்து உதவிய வண்ணம் இருந்தாள் சிந்து, தோழி என்றாள் இப்படிதான் இருக்கவேணும் என்ற அளவிற்கு இருந்தனர்இருவரும்!!.

இந்த நேரத்தில் தான் முத்தஅண்ணவிற்கு திருமணம் ஆனது அதை தொடர்ந்து இரண்டாவது அண்ணாவிற்கும் முடிந்தது அவர் திருமணம் செய்ய வந்தபோது நண்பர்களையும் கூட்டிவந்தார், அவர்கள் எல்லோரும் ஒருமாதம் நின்றனர் ,அப்போ அங்கே போய்ப்போய்வந்த வாணியை அணைவரும் பார்தனர் ,அவிசியமின்றி அவள் யாரிடமும் கதைப்பதுவுமில்லை அடுத்தவர் விடையங்களில் அவசியமின்றி தலையிடுவதுவுமில்லை சிறு சிறு உதவிகள் செய்வாள். அங்கு அப்போது யாரும் கிண்டலடித்தால்.மெல்லிய புன்னகை மட்டுமே சோகம் கலந்து வரும், இதை எப்போதும் இருகண்கள் மட்டும்மௌனமாய் ரசித்துக்கொண்டது.யாருக்கும் தெரியாமல்!!

திருமணம் முடிந்து அணைவரும் சென்று சிலமாதங்கள் ஆனபின்னர் சிந்துவோடு இரண்டாவது அண்ணா கதைத்தார் என்னோடு வந்த சாந்தனை பற்றி எண்ண நினைக்கின்றாய் என்று சிந்து அவருக்கென்ன நல்லவர் தான் என்றால் .சரியென வைத்து விட்டார்.

சிந்துவிற்கு தான் மனசுக்கள் ஒரோ குழப்பம் என்னசெய்வது என்று தெரியாது அண்ணியிடம் ஒர்நாள் கதைக்கும் போது  விடையத்தைக் கேட்டாள். அதற்கு அண்ணி கூறியது வருத்ததை தந்தது  ஆனாலும் பதில் கூறாது யோசனையில் ஆழ்ந்தாள். கடசியில் தாயிடம் போய் அம்மா நம்ம சின்னண்ணாவை பற்றி ஒன்று சொல்வேண் கோவிக்க கூடாது என்றாள் அதற்கு தாய் இல்லை  சொல்லுங்க என்றாள் .இல்ல சின்னண்ணன் நம்ம வாணியை விருப்புகின்றார் அதை தெரியாது அண்ணாக்கள் அவர்கள் நண்பன் சாந்தனை பேசுகின்றனர் அது தான் என்றாள் தாய் சிறு நேரம் பேசாது இருந்து விட்டு சொன்னார் அவன்  பார்சல் அனுப்பும் போதே தெரியும் ஆனால் அப்பா சம்மதிக்க மாட்டார் அவரை பற்றி தெரித்தும்  கதைக்கின்றாய் இதை இப்படியோ விட்டுவிடு அவனும் அவளிடம் சொல்லவில்லை அவளின்மனதிலும் அப்படி இல்லை அதனால் குழப்பாதே அவர்கள் பேசிய பெடியனை பிடித்தால் செய்து வைப்போம் தாயுக்கும் இயலாத நேரம் ஒரு நல்லது நடத்தாள் அவளின் வாழ்வு நன்றாக அமைத்திடும் அல்லவா.இதை கேட்டதும் முதலில் சிந்துக்கு அண்ணாபாவம் என்ற எண்ணதால் கோவம் தான் வந்தது ஆனால் யாரிடமும் சொல்லி பயனில்லை என்பதால் மௌனமானாள்.

.தொடர்ந்தது பேச்சு நடந்தது இரு அம்மாக்களும் வாணியின் திருமணம் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தனர் அப்பா வாணிக்கு தேவையானதை தானே செய்வதாய் கூறினார் சிந்துவிற்கு போவம் தான் வந்தது அண்ணாவை விடடு போனால் போதும் என்று தானே செலவு செய்ய முன்வந்தாரோ என்று. நல்ல காலம் சாந்தனுக்கு அக்கா மட்டும் இருப்பதாக சொன்னார்கள்.வாணி நன்றாக இருப்பாள் என்று மனசு சொல்ல அண்ணாவை எண்ணிய கவலையோடு வாணியின் திருமணத்தை செய்ய எல்லோரும் ஒன்றாய்இணைந்தார்கள்

வாணிவீடு சின்னதாய் இருந்தால் எங்கள் வீட்டையை பெண் வீடாய் மாற்றி மாப்பிள்ளை வீட்டை அண்ணிவீட்டில் வைத்தோம்.என்றார் அப்பா
நாட்களும் நகர்ந்தது எல்லோர் முகத்திலும் சந்தோசம் வாணியில் முகத்தில் மட்டும் புதிதாய் என்றும் எல்லாத மகிழ்ச்சி கலந்த நாணம் காணப்பட்டது முதல்முதல் நான் வாணியை வித்தியசமாய் பார்தேன் ஆனால் மனதிற்குள் என் அண்ணாவிற்காய் அழுதும் கொண்டேன் கொஞ்கொஞ்சமாய் குறைந்த நாட்கள் மணிகளாய் நிமிடங்களாய் வரவாய் காதிருந்தது அப்பதான் வழமைபோல் கூட்டி வரபோனார்..

................கார் வந்து  வாசலில் நிற்கும் சத்தம் கேட்டததும் சிந்து தான் முதல் ஓடினால் அவர்களை பார்பதற்கு ஆனால்
 அதிர்ந்த விழியோடு கல்லாய் நின்றாள் ,காரில் இருந்து இறங்கும்
 நபரை பார்த்ததும்.  அம்மாவின் குரல் கேட்டும் கேட்காமல் அசையாது
 நின்றாள் .பதில் இல்லாத காரணத்தால் தாயும் வெளியில் வந்தாள்
 அவளின் கண்ணையும் ஒரு நிமிடம் நம்ப முடியாது போக தடுமாறியோ
 போனாள்  தன் மகனை பார்த்ததும்  அந்த நெடியோ அத்தனை
 விம்பமும் திரையாய் ஓடியது அவள் விழிகளில்..எல்லோரும் அதிர்ந்தவிழியோடு மாப்பிள்ளையை தேட காரில் மாப்பிள்ளை இல்லை...
அவர்கள் மனதை புரிந்த ரகு தாயை பார்த்து கேட்டான்  அம்மா என்ன என்னை பார்த்தால் மாப்பிள்ளை போல் தெரியவில்லையா என்று அவனை தாய் திரும்பி பார்பதற்குள் அங்கு வந்த வாணியோ சொன்னாள் யார் இல்லையென்றது இப்போ நீங்கள்  மிகவும் அழகாய் இருக்கின்றீர்கள் எந்த பெண்ணும் மயங்கிவிடுவாள் உங்களை பார்தால் என்றாள் அதற்குள் அப்பா சரிசரி வாசலில் நின்று தானா பேசவேண்டும் முதலில் உள்ளோ போங்கள் என்றார்.

சிந்துவிற்கு தான் தலைசுற்றியது நடப்பது புரியாது  எல்லோரும் போய்விட்டது கூடதெரியாது அப்படியோ  நின்ற சிந்துவின் கைகளை பாசத்தோடு தமையனின் கரம் அணைத்து சொன்றது. அவளை உணர்ந்தவன் மெல்ல சொன்னான் நான் தான் வாணிக்கு தாலி கட்டபோகின்றோன் இப்போதைக்கு யாரிடமும் சொல்லாதே என்று.தமயனின் கதையை கேட்டசிந்துவிற்கு மயக்கமே வந்தது .ஏதையோ எண்ணிக் கோண்டு திரும்ப வாணி தேனீரோடு அருகில் நின்றாள் அதனை வாங்கி ரசிந்து குடிந்துக்கொண்டு இருந்தவனை அதிர்ச்சியோடு பார்த்தபடியிருந்தவளை தாய் கூப்பிட எழுந்து போனாள்....................ஆனாலும் அண்ணாவிடம்       இப்போ        எப்படியாவது உண்மையை கேட்கவேண்டும் .வாணிக்கு யார் மாப்பிள்ளை பாவம் அவள் எதுகும் தெரியாது  மகிழ்ச்சியாய் திரிகின்றாள்  எப்போ சாந்தன் வருவார் என்றபடி யோசனையில் போனவளை தடுத்துபிடித்தாள் வாணி என்ன சிந்து அண்ணா எவ்வளவு காலம் சென்று வீடு திரும்பியுள்ளார் நீ எப்பவும் போல் இல்லாது எதையோ பறிகொடுத்தவள் போல் திரிகின்றாய் என்று முடிப்பதற்குள் சிந்து உணர்ச்சிவாசப்பட்டு அப்படியொன்றுமில்லை உன் திருமணம் மிகவும் சிறப்பாக உனக்கு பிடித்தவரோடு நடக்கவேணுமல்லவா அதுதான்  யோசனை என்றாள். என்ன வரவர நீ பாட்டிமாதிரிபேசுகின்றாய் என்று கிண்டல் அடித்து சிரித்த சிரிப்பு ஓர் நெடி எங்கோ அலைமேதிய போல் ஒர் உணர்வைஅந்த சிரிப்பில் எழுப்பிஓய்ந்தது. அதனை ரசித்த படி ரகு சொன்னான்  எவ்வளவு அழகான சிரிப்பு உன் சிரிப்பு என்று !!அப்படியே சும்மா விடாது சிந்துவை வம்பிற்கு இழுத்தான்  வாணியின் சிரிப்பை  ரசித்துக்கொண்டு இருந்தால் பசிக்காது என்றாலும் வாணி என்னோடு வருவதால் எப்பவும் ரசிக்கலாம் தானோ .இல்லையா  சிந்து  என்றான். தமையனை பார்க்க அங்கோ வந்த அப்பா கூறினார் அவள் குப்பையில் பிறந்தாலும் ஒர் அற்புத பொக்கிசம் அவள் வாழும் இல்லம் என்றும் உயிர் உள்ள ஒர் அழகிய  ஒளியாய் விளங்கும் .அப்போ சிந்து!! அப்பா நான் என்றாள் என் மகள் வாழும் இல்லம் அமைதியாய் இருக்காது கலகலப்பாய் இருக்கும் ஆனால் கணவன் தான் பாவம் என்றார் பரவாய் இல்லை அப்பா உங்கள் தங்கையின் மகன் தானோ அவன் இங்கு பிறத்தாலும் அங்கு வளர்த்ததால் சமாளித்து விடுவான் யோசிக்காதீங்க  சிந்து செல்லமாய் கோவித்து கொண்டுபோக தாய் மகளை பிடித்து அணைத்தபடி எப்பவும் வீட்டில் உள்ளவர்களு அவளை வம்பிற்கு இழுக்காது விட்டால் நித்திரை வராதே என்றார்.ஒரு மாதிரி எல்லோரும் ஒன்றாய் சேர ரகு தன்னறைக்கு அழைத்து சென்றான்.

..........அங்கு அவர்களுக்காக வேண்டி வந்தனை எடுத்து கொடுத்தான் அவை யாரின்  மனதிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது விட்டாலும். வாணி மட்டும் மகிழிவின் உச்சத்தை அடைத்தால் சின்ன வயதில் இருந்து வாணிக்கு  சின்னதாய்  சிம்பிலாய் போடுவதில் விருப்பம் ஆனால் அவர்களிடம் வசதியில்லாத காரணத்தால் அதை நினைத்து ஏங்குவது இல்லை அந்த கற்பனைக்கு உயிர்கொடுத்து ரகு வேண்டி வந்து இருந்தான் அவளின் ஆச்சரியவிழிகளை பார்த்த சிந்து அதை பறித்து கழுத்தில் அணிந்து விட்டாள் வாழ்வில் முதல்முதல் வாணி விரும்பியணித்த நகையென்றால் அது ரகு கொடுத்தது தான்.

ரகு இன்னும்ஒரு பாசலை எடுத்து இது கல்யாணபெண்ணிற்கு மாப்பிள்ளையும் நானும் வேண்டியது என்று கொடுத்தான் அதை ரகுவின் தாய் தான் வேண்டிபிரித்து பார்த்தாள் அதற்குள் பட்டுச்சாறி தாலிக்கொடி மற்றும் நகைகள் இருந்தது அதை அணைவரும் வேண்டி ஆவலோடு பார்க்க என்ன வாணிக்கு இரண்டு மாப்பிள்ளையா நீங்களும் வேண்டி வைத்திருக்கின்றீங்க சாந்தன் அண்ணாவும் வேண்டிவந்திருக்கின்றார் என்றாள் சிந்து  அதற்கு வாணியின் தாய் சிரித்துக்கொண்டு தாலி ஒன்று தானோ சிந்து அதனால் மற்றவைகளை பார்த்து  தேவைக்கேற்ப மாற்றுவோம் என்றார் அங்கு நின்ற சிந்துவின் அப்பா ரகுவைத்திட்டினார் முதலோ சொல்லி இருந்தா நாங்கள் அவளுக்கு தேவையான வேறு பொருளை வேண்டியிருக்கலாம்
 .இல்லை அப்பா நாங்கள் திடிர் என்றுதான் முடிவு எடுத்தோம் அது தான் அப்பா சாந்தனுக்கு இதில் பெரிதாய் விருப்பம் இல்லை நான் தான் வேண்ட சொன்னோன் அங்கு சாறி பெரிதாக வேண்ட முடியாது அதனால் வாணிக்கு எல்லாம் தேவைதான் என்றான் சரி சரி எனி கதைத்து என்ன செய்வது தாலிக்கு பொன்னுருக்க நாளைக்கு நாள் எடுத்தால்  சாந்தனும் வந்திடுவார் மற்றவேலைகளை பார்க்கலாம் என்றார்.
.........................சரியென அணைவரும் தங்கள் வேலைகளை தொடங்கினர்  சற்று ரகுவின் வருகையால் தாமதித்த கல்யாண கலகலப்பு மீண்டும் சூடுபிடிக்க வீடு கலகலப்பானது அக்கம் பக்கம் எல்லாம் வாணியின் சந்தோஷத்தில் பங்குகொள்ள  தேடிவந்து கொண்டு இருந்தது. ஊரில் எந்தணையோ பெயர்கள் இருந்தாலும் எல்லோரும் பாசம் காட்டும் ஒருவராய் வாணிதான் இருந்தாள். அடிக்கடி பாட்டிசொல்வாள் விரோதியோ இல்லாது எல்லோரும் நேசிக்கும் உன்னில் அந்த கடவுளோ வாழ்வதாய் பார்க்கின்றேன் என்று. இதை கேட்டதும் வாணி கிண்டலாய் சொல்லி விட்டு போவாள் என்னையும் மஞ்சல் தண்ணீர் ஊற்றி வேப்பமரதிற்கு அடியில் வைத்துவிடாதீர்கள் என்று இறையிடம் பாசமும் பத்தியும் நிறையவோ இருந்தாலும் மற்றவர்களை போல் பெரிதாக அலட்டிகொள்வது இல்லை மனசு எப்பவும் அலுக்கில்லாது இருந்தால் போதும் என்பாள்
மற்றவர்களை துயரபடுத்தி பார்க்காது மற்றவர்கள் துயரங்களை தன் துயரங்களாய் எண்ணி துடைக்க நினைப்பது தான் இறையன்பு என்பாள்.....
இப்படி அடிக்கடி நண்பிகளுக்கிடையில் சண்டைவந்திடும்  சிந்து பணதோடு பிறந்ததாள் அவளுக்கு நிறைய உணர்வுகள் புரியாது. வாணி சிந்தும் விழிகளுடன் வாழ்வதாள் மற்றவரின் சின்னவிடையம் கூட பெரிதாய் தோன்றும். ஆனால் வாணிக்கு வரமாய் கிடைத்தது சிந்துவின் பெற்றோர்கள் இப்படி பெற்றோர்கள் அமைந்தால் எந்த குழந்தையும் வறுமையில் வாழாது....
அப்படியொறு பாசம் வாணியில்!! கோவத்தை கூட சிரிப்போடு காட்டி கண்டிப்பது ரெம்பவும் பிடித்தது வாணிக்கு.......................

வெளியில் சென்ற அப்பா வீடு வந்ததும் வராததுமாய்  ரகு நாளை சாந்தன் மதியம் வந்து விடுவார் தானோ என்றவாரோ வந்தார்  ரகு ஆமாம் என்றான்
சிந்துவின் அம்மா என்ன விடையம் என்று கேட்க நாளைக்கு பந்தல் கால் நட்டுபின்னோரம்  பொன்னும் தாலிக்கு உருக்கி விடலாம் என்றார்  என்ன அவசரபடுகின்றீங்க என்று கேட்க அப்ப மாப்பிள்ளை தாலிகட்டியதும் வாணியோடு கொஞ்ச நாள் கூட நிற்காது அப்படியோ போவதா சின்னச்சிறுசுகள் கொஞ்சநாளாவது சேர்ந்திருக்க வேணாமா என்றார்
அதுவும் சரிதான் சிந்து நீபோய் பக்கத்து வீட்டு லட்சுமி பாட்டிக்கு சொல்லி விட்டு வா நாளைக்கோ நல்ல நாளாம் பலகாரம் சுடவேணும் என்று  சரியம்மா என்று கூறியவள் வாணி வா என்றாள் எனி வாணி எங்கும் வரமாட்டாள் நீங்க போய் வாங்க என்றாள் சரியெனச் சொல்லி சென்றாள்
 சரி சரி சிந்து உன் திருமணதின் போது எல்லாம் வாணி செய்வாள் போய்வா என்றான் ரகு
திரும்பி பார்த்தவள் என்ன அர்த்ததில் சொல்லுகின்றான் என்று தெரியாது மௌனமாய் சென்றாள் நாளைக்கு தேவையான சாமான் பட்டியல் போட்டனர் வாணியின் தாய் கவலையாக சொன்னார் தகப்பன் செய்யவேண்டியது அவர் எந்த அக்கரையும் இல்லாது திரிகின்றார் வளர்த்த கடனுக்காய்  நீங்கள் கஸ்ரபடுகின்றீங்கள் என்றார். சரிவிடுங்கள் எங்களுக்கு சிந்து வேற வாணி வேற இல்லை  அவளை பெற்றது நீங்கள் என்றாலும் வளர்த்தது நாங்கள் தானே சிந்துவிற்கு ஒரு சகோதரி இல்லை என்று யாரும் நினைத்தது இல்லை சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் கண்டதையும் நினைத்து குழம்பாமல்.
.....இரவு பெரியவர்கள் பேசிகொண்டு இருக்க வாணியும் சிந்தும்  நேரத்தோடு நித்திரைக்கு சென்று பேசிக்கொண்டோ உறங்கி போக விடிகாலை சேவல் எழுப்பியது  வாணி எழுந்து விட்டாலும்  அப்படியோ எதிர்கால கனவில் கற்பனைகுதிரையோடு  படுத்திருந்தால் மணித்துளிகள் சென்றது தெரியாது இருந்தவளை தாய் வந்து கதவை தட்டி எழுப்பினா வாணி மாப்பிள்ளை வந்து விட்டார் உன்னை தேடுகின்றார் .
குளித்து விட்டு வா என்றார் அதை கேட்டுக்கொண்டே சிந்து எழும்பினால் அறையை விட்டு வெளியில் வந்தவளுக்கு நண்பர்களின் சிரிப்பும் கதையும் கேட்டது கொஞ்சம் அச்சம் கொஞ்சம் பயம் உள்ளுக்குள் தட்ட மெல்ல நடந்து கிணற்றடிக்கு போனால் அதை பார்த்த சிந்துவின் அப்பா கிண்டலாக பேச உள்ளிருந்த நண்பர்கள்  வெளியில் வந்தனர் வாணிக்கு உடல் கூனி குறுகியது
உடனோ சாந்தன் வாணி தண்ணீர் எடுத்து தரவா என்றான் வாய் வார்த்தையின்றி நிக்க தலை வேண்டாம் என்றது உடனோ ரகு சொன்னான் அப்பா மாப்பிள்ளையை வீட்டில் வைத்திருப்பது சரிவராது நான் சாப்பிட்டதும் அண்ணிவீட்டில் விட்டு விட்டு வருகின்றோன் என்று அது தான் சரி என்றார் அப்பாவும் சாந்தன் கோவமாய் ரகுவை பார்க்க ரகு கண்ணடித்தான்
அதற்குள் அவசர அவசரமாய் குளித்து விட்டு வாணி அறைக்குள் போய்விட்டாள் ரகும் சாந்தனும் குளிக்க சென்றனர் .................................
                                     அம்மா வந்து சாப்பிட அழைத்தார் எல்லோரையும் அடுப்படி வேலை எல்லாம் வாணியின் அம்மா தான் செய்தார்  எல்லோரும் சேர்ந்து சாப்பிட போக வாணி மட்டும் வெளியில் வரவில்லை சாந்தன் வாணியின் அறைக்குள் போனான் வாணியின் உடல் நடுங்கியது சாந்தன் என்ன வாணி இப்படி என்னை கண்டு ஒடினால் நான் பாவம் இல்லையா என்றவன் வாணியின் கழுத்தில் கிடந்த நகையை பார்த்து விட்டு அப்பவோ ரகு சொன்னான் நான் தான் யோசிக்கவில்லை என்றான் வாணி பதறிபோய் என்ன என்றாள் நீங்கள் பெரிதாய் நகை அணிவதில்லை என்று ரகு சொல்லி இதை வேண்டினான் நான் தான்யோசிக்காது அப்படி வேண்டி விட்டேன் என்று வருந்தமாக கூற இல்லை நீங்கள் வேண்டியது பிடிந்தது அதை வெளியில் போகும் போது போடுகின்றேன் இதை வீட்டில் போடுகின்றேன் என்றாள் சாந்தன் முகம்மலர ரகு என்ன டா மச்சான் எங்க வீட்டு பெண்ணோடு கதையென்றான் சரி இன்னும் எந்தணை நாளைக்கு என்று கூறிவிட்டு ரகுவின் கையை பிடித்தபடி சொல்ல வாணி மனதிற்குள் வேண்டி கொண்டாள் இந்த நட்பு என் உயிர் உள்ளவரை பிரியாது இருக்க வேண்டும் என்று
                                               கட கடவென வேலைகள் தொடர மாப்பிள்ளை வீட்டுக்கும் பெண்வீட்டுக்கும் கலகலப்பாய் ஆட்கள் அங்கும் இங்கும் என்று திரிய ரகு சாந்தனோடு அங்கோ தங்கிவிட்டான் இங்கே அப்பாவும் அங்கோ மகனும் கவனித்து கொண்டனர் விடிந்த பொழுது சுபவேளையாய் விடிய திருமணநாள் சுபமாக கோயில் மண்டபவத்தில் தொடங்கியது ..........
விடிந்தும் விடியா பொழுதில் ஒர் இன்ப அதிர்ச்சி யாய் அணைவருக்கும் தெரியாது அங்கோ திடிர் என்று ரகுவின் மூத்த அண்ணாவும் அண்ணியும் வந்து சேர்ந்தனர். அணைவரும் இரட்டிப்பு மகிழ்ச்சி அவர்களை வரவேற்க வந்த வாணியின் நாணம் கலந்த வெட்க பார்வையை ரசிந்த அண்ணி சொன்னார்!! வாணியை முதல் முதல் தங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்ந்தவர் ,இவர் தான் என்றும் அவளை சிந்துவை போல் பார்த்து கொள்ளுங்கள் அம்மா என்று சொன்னாராம்-ஏதோ ஒர் பாசம் அவளிடம்  மட்டும் என்றாரார்  அதை விட அவள்  வந்த நேரம் தான் எங்கள் வாழ்வில் நிறைய மாற்றம் வந்தது பணம் இருந்தும்  இல்லாத ஒர் சந்தோஷத்தை தந்தவள் அவள் தான் அதனால் வாபோய் வருவோம் என என்னையும் அழைத்து கொண்டு வந்து விட்டார்
என்று கூறிமுடிப்பதற்குள் வாணி ஓடிவந்து பாதம் வணங்கி கண்ணீரால் அவர் பாதம் கழுவி யெழுந்தால் இறுக கட்டியணைந்தவர் வாணியின் கண்ணீர்துடைத்து அவளை தாய்யிடம் கொடுத்து விட்டு தங்களை தயர்படுத்த சென்றுவிட்டார் அன்று தான் அவர் அழுதையும் எல்லோரும் கண்டனர் அப்படி என்னதான் இந்த பெண்ணில் உள்ளது அந்தனை இதயங்களையும் ஒரு பார்வையிலோ தன்வசம் படுத்திவிட என எல்லோரும் கேட்பது வழக்கம். சிந்து வாணியின் கண்ணீரால் அழிந்த முகத்தின் அழகை சரிசெய்ய தனியறைக்குள் இழுந்து சென்றாள்....
   இந்த செய்தியை ரகுவிற்கும் சாந்தனுக்கும்சொல்லி அனுப்பினர் உலகில் வரமாய் பிறப்பது அரிது வறுமையில் பிறந்தாலும் சிறப்பது அரிது ஆனால் இந்த  மலருக்கு மட்டும் எல்லாம் அமைத்தால் தாய் பெற்றதன் வலிதனை இப்போது தான் மறந்து  உண்மையாய்சிரிக்கின்றாள் தன் மகளை  நினைத்து...
  நேரம் நல்லதை சொல்ல மாப்பிள்ளை வர ஐயர் தன்கடமைதொடங்க அண்ணாவோடு அண்ணி ரகுவோடு சிந்து அம்மாவோடு அப்பா  தன்வேதணை மறந்து பெற்றவர்கள் சுழ்ந்து நிற்க தாலி மலரின் கழுத்தில் மலர்மழையின் நடுவோ கொடிமேளசத்தின் ஒலியோடு ஏறியது அது பெண்ணின் கழுத்தில் ஏறும் !சந்தோஷகயிறா இல்லை கழுதை அறுக்கும் தாம்புக்கயிறா....................................................என கட்டியவர்கள் பலர் கேட்க மணப்பெண்ணும் மணமகனும் சந்தோஷநிமிடத்தில் தங்களை மறந்து நிற்க அவ்வளவு நேரமும் தனியோ விட பட்டஇருவோடும் அண்ணனும் தங்கையும் சேர்ந்தனர் ரகுவின் கிண்டல்பேச்சு உறவுகளின் சந்தோஷபேச்சு சிந்துவின் கவலை எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களை வலம் வர தொடர்ந்து நிகழ்வால் அணைவரும் களைத்து ப்போய் வீடு சொல்லும் வரை தொடர்ந்தது வீட்டிற்குள் வந்ததும் வாணிக்கும் சாந்தனுக்கும் ஒதுக்கிய அறைக்குள் சிந்து விட்டு வர ரகு  இரண்டு கையிலும் தேனீர் கொண்டு வந்தான் அட...டா  என்ன அக்கரை என்றாள் சிந்து ரகு சொன்னான் இது அவர்களுக்கு இல்லை நானும் நீயும் தான் வேலை செய்து களைத்து விட்டோம் அதனால் வா குடிக்காலம் என்றதும் வாணி சிரிக்க அப்பா கல்யாணபொண்ணு இப்பதான் கொஞ்சம் பயம் இல்லாது சிரிக்கின்றான் ...எனி சாந்தனுக்கு பரவாய் இல்லை என்றான் உண்மையில் தண்ணீர் தாகமாய் தான் இருந்தது அணைவருக்கும் ஓரோ ஆட்களாய் இருந்தால் ஒன்றும் குடிக்கவில்லை வாணி ஒரு கப்பை வேண்டி சாந்தனும் வாணியும் பாதி பாதி குடிக்க ஒன்றை சிந்தும் ரகுவும் குடித்தார்கள் உடைமாற்றி வந்த அண்ணனும் அண்ணியும் வந்து என்ன அவளை அப்படியோ விட்டு வீட்டீர்கள் உடைகளை மாற்ற விட்டால் தானோ  அவளுக்கும்  சுற்றி விட்ட பாரம் குறையும் என்றார். உடனோ சிந்து  தன்னறைக்கு கூட்டி சென்றாள் உடைகளை மாற்ற எல்லோரும் சிந்து வின்  அறையில் இருந்து சாந்தனோடு  கதைத்துக் கொண்டு இருந்தனர்...

நேரம் நகர அவர் அவர் களைப்பால் தங்கள் தங்கள் சாப்பாட்டை முடிந்துக்கொண்டு நித்திரைக்கு சொல்ல வாணியும் சாந்தனும் தனிந்து விட பட்டனர். வாணிக்கு தனிமை பிடிந்திருந்தாலும் கொஞ்சம் அச்சம்கலந்த பயம்
கூடவோ  ஒட்டிக்கொண்டது...
             அறையில் இருந்து வெளிய வந்த சிந்து ரகுவை பிடிந்து இழுத்து சென்றாள் தன்னறைக்கு  என்ன என்ற கேள்விக்கும் பதில் கூறாது.
அறைக்குள் சென்றவுடன் ரகு கேட்டான் என்ன சிந்து இப்பயாவது சொல்லன் ஏன் இப்படி இழுத்து வந்தாய் என்று  உங்கள் மனதில் என்ன உள்ளது ஏன் வந்தவுன் அப்படி கூறினீங்க  எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாள் ரகு சிரித்து விட்டு சொன்னான் மக்கு எனக்கு வாணியை பிடித்திருந்தால் அவள் நிழலைகூட எவனும் தொட முடியாது வாணியை என் உயிரை விடவும் பிடிக்கும் ஆனால் அவளை மனைவியாகவோ காதலியாகவோ ஒரு நாளும் நினைத்தது இல்லை எனக்கு அம்மா போல் அவளும் சாந்தன் அண்ணா அண்ணி எல்லோரும் முதல் என்னிடம் கேட்டார்கள் நான் சரி சொன்ன பின்னர் தான் உங்களோடு கதைத்தார்கள் சாந்தன் எனக்கு நண்பன் வாணி எனக்கு தாய் இது தான் உறவு நீங்கள் நினைப்பது போல் எனக்கோ அவளுக்கோ காதல் இல்லை  எப்படி சிந்திதாலும் என் வாழ்வை மாற்றியமைத்தவள் எனக்கும் அறிவு உண்டு என்பதனை எனக்ககோ புரியவைத்து  என் வாழ்வை இன்று உயருக்கு கொண்டு சென்றவள்  உன்னை போல் தான் அவளும் சும்மா உன்னை சீண்டி பார்தேன் அவ்வளவு தான்  சரி நேரமாகின்றது போய் நித்திரை கொள்ளுங்க என்று கூறி சென்று விட்டான் அந்த பதில் சிந்துவிற்கு நின்மதியை தந்தாலும் ஏதோ சிந்தனை தொடர படுகைக்கு சொன்றாள் .......................
                                               வாணியை பார்த்து சாந்தன் இங்கு தொடர்ந்தான்  என்ன வாணி இன்னும் பதில் சொல்லாது அப்படியோ நின்றா என்ன சொல்லுங்க என்ன பயம் என்னிடம் இல்லை என்றாள் பயப்பிடவேண்டாம் உங்களை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு தான் விரும்பி வந்தேன் உங்கள் அப்பா மாதிரி நான் குடிகாரன் இல்லை உணர்வுகளை புரியாது நடந்து கொள்ள எனக்கும் அக்கா மட்டும் தான் எனக்கும் சின்னவயதில் இருந்தே அம்மா அப்பா இல்லை தனியாக தான் படித்து வளர்ந்தேன் எனக்கும் கவலை வேதணை எல்லாம் தெரியும் நான் இன்னும் கொஞ்ச நாள் தான் இருப்போன் என்னோடு முதல் பயம் இல்லாது உறவாடுங்கள் நாமக்கு இங்கு எந்த உறவும் வேண்டாம் அது எனக்கு விருப்பவும் இல்லை கொஞ்ச நாள் உங்களோடு சேர்ந்து இருந்து விட்டு உங்களை விட்டு போய் மாத கணக்காய் அதற்காக எங்கி தவிந்து காத்திருக்க வேண்டாம் .முதல் நன்றாக புரிந்து கொள்ளுங்க என்னை!!

உங்களுக்கு இப்பதான் 21 வயது நிறையவோ காலம் இருக்கு எனக்கு உங்கள் அன்பு எப்பவும் குறையாது வேண்டும் நீங்கள் அழுதது எல்லாம் போதும் எனி வாழும் என் வாணிக்கு உண்மையான புன்னகை வேண்டும் அதற்காக நான் இருக்கின்றேன் என சாந்தன்சொல்ல சொல்ல வாணி மெல்ல மெல்ல அவன் பக்கம் சாய்ந்தால் அதில் ஒர்நம்பிக்கை இருந்தது  தன் சந்தோஷத்தை மட்டும் நினைத்து வாழ்ந்த ஆணைபார்த்த வாணிக்கு முதல் முதல்  உண்மையான அன்பின் மதிப்பு புரிந்தது அவர்களுக்கு இடையில் எதுகும் நடைபெறவில்லை ஆனால்
சாந்தன் என்ற ஆண் வாணிக்கு ஆணுக்குள் ஒர் வித்தியாசமான மனிதனாய் தெரிந்தான் திருமணம் என்றாலோ இரண்டு உடல் இணையும் பந்தம் என்ற கருத்தை சற்று மாற்றி அதற்கும் மேல் ஒர் அற்புதசொந்தம் உள்ளதை உணர்ந்தாள் . வாணிக்கு மிகவும் பிடித்திருந்தது முதல் முதல் தன் உணர்வை மதித்து அதற்கும் சம்மதம் கேட்டு  அவன் நடந்து கொண்டது இன்னும் பிடிக்க உண்மையான  சந்தோஷத்தோடு அவன் மார்வில் தலைசாய்ந்து படுத்துக்கொண்டாள் உடல் மனம் எல்லாம் நின்மதியானது........
                                                          வாழ்கையில் பலர் கூறிக்கொண்டு தான் இருக்கின்றனர் ஆனால் எதையும் விட்டுக்கொடுத்து வாழ பழகிகொள்ளவில்லை ஆனால் சாந்தன் அப்படியில்லாது இருந்தான் இது வாணிக்கு ஒர் விபத்தில் சிக்கி கொண்டவர் உயிருடன் மீண்டு வந்தால் ஏற்படும் நின்மதியாய் போல் இருந்தது வாழ்கையென்னும் விபத்து இதயத்தை அடைவு வைத்து வெறும் உணர்ச்சி சிறைச்சாலையில் சிக்கின்கொண்டு இது தான் வாழ்கையென்று வாழ்வதில்லை இரண்டு இதயத்தின் உணர்வின் ஒரு
இதயம் வாழ்வது அது வாணிக்கு கிடைத்தாக எண்ணி சந்தோஷபட்டுக்கொண்டாள்.. மெல்ல நகர்ந்த பொழுதோடு அரட்டையும் கிண்டலுமாக பொழுது போனது அன்று அப்படி தான் எல்லோரும் ஒன்றாய் வாணியின் அறையில் கூடினர் பெரியண்ணா தொடங்கினர் வாணியை பற்றி சொல்ல சாந்தன் ஆர்வமாக கேட்க வந்தான் ரகும் வாணியும் தான் ஒன்றாய் திரிவார்கள்  ரகு சரியான குழப்படி என்பதால் நிறையவோ அடிவாங்குவான் அடி வாங்கியதும் ரகு உடனோ தேடுவது வாணியை தான் நாங்கள் எல்லாம்
உடனோ தெரியாத மாதிரி நிற்போம்  அவன் அழக்கூடாது !இந்தம்மாவிற்கு
உடனோ ஆறுதல் சொல்ல வந்திடுவா அவ வந்து கண்ணீர் துடைத்து விட்டா போதும் இவனுக்கு எப்படி தான் அந்த வலிகள் போகுமோ தெரியாது  உடனோ எல்லாம் மறந்து வாணியின் கையைபிடித்து கொண்டு இருவரும் எங்களை எதிரியை பார்பது போல் பார்த்து விட்டு போவார்கள் அம்மாவிற்கோ ஆச்சரியமாய் இருக்கும்  தான் பெற்றபிள்ளை தான் என்ன சொன்னாலும் காதில் வாங்காது அவள் சொன்னவுடன் கேட்பதை பார்த்து !! உடனோ தாய் சொன்னால் ரகுவின் சேட்டை தோய்க்க எடுத்தால் பட்டன் போடும் ஒரு பக்கம் எப்பவும் சுருண்டுதான் இருக்கும் இந்தம்மா  விரலை விட்டு சுருட்டுவது  இவர்கள் ஒன்று சோர்ந்தால் இங்கு இன்னும் ஒருவருக்கு கோவம் வரும் பாருங்க என்றதும் சிந்து புன்னைத்த படி   அது வாணி என்னோடு சேராது ரகு அண்ணாவோடு சேர்வதால் என்றாள்  சரி சரி இப்படியே இன்றோடு பிரித்தா போக போகின்றீர்கள் எல்லோரும்  ஒன்றாய் தானோ இருக்க போகின்றீர்கள் லண்டனிலும்!!! போய் பேசுங்க !! படுங்க விடிய எல்லோரும் கோவிலுக்கு போக வேண்டும் வாணியின் தாய்யின்  வேண்டுதலை நிறைவேற்ற வேணும் சாந்தன் நிற்பபோடு என்று எல்லேரையும் அனுப்பி விட்டு தானும் படுக்கைக்கு போனார் சிந்துவின் அப்பா!!!விடிந்தது எல்லோரும் குளித்து வெளிக்கிட்டு கோவிலுக்கு சென்று அங்கோ எல்லாம் முடித்து கடைத்தெருவிற்கு சொன்றனர் உடனோ ரகு சொன்னான் இன்று செலவு முழுவதும் வாணி தான் யாருக்கு என்ன தேவையோ கேட்கலாம் என்றான்  எல்லோரும் வாணியின் பக்கம் திருபமுதல் சாந்தன் தன் பேஸ்சை வாணியிடம் கொடுத்தான் சரியென்றாள் முதல் முதல் வாணி சாந்தனுக்கு என்ன வேண்டி கொடுக்க கோகின்றாள் என்று பெரியண்ணா கேட்டார்  அவரின் பணதிலோ அவருக்கா என வாணியின் மனம்சங்கடம் கொள்ள இப்ப பணம் யாருடையது என்று யோசிக்க வேண்டாம் வாணி உங்களிடம் தந்தபணத்தில் நீங்கள் யார் யாருக்கு  என்ன என்ன வேண்டி கொடுக்க ஆசைபடுகினடறீர்களோ அதை செய்யலாம் என்றான் ரகு வாணிதலையை அசைந்துவிட்டு அணைவரையும் ஐஸ்கிறீம் கடைக்கு கூட்டி சென்று அவர்களுக்கு பிடித்ததை கேட்டு வேண்டி கொடுத்து விட்டு தானும் சிந்தும் கடைக்கு போவதாய் சொல்லி விட்டு சிந்துவை கூட்டி கொண்டு சொன்றாள்................................என்ன வேண்டி வரபோகின்றாள்  என்று தெரியாது கதைத்துக்கொண்டு இருவரும் வந்தனர் ஆனால் கையில் பெரிதாய் ஒன்றுமில்லை..............