Thursday, February 12, 2009

நந்தவனம்

சின்னதாய் யோசித்து பார்ப்போமா ?

*கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொள்கின்றார்கள்
என்பதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதில்லை என்றாகி
விடுமா? இல்லவே இல்லை, ஏனென்றால் தம்பதியினர் ஒருவரை ஒருவர் மனதார நேசிக்கின்றார்கள்.இருந்தாலும் சில சமயங்களில் ஏன் சண்டை வருகின்றது.இப்படி சண்டை வருவதால் ஒருவரை
ஒருவர் புரிந்து கொள்ளாது மணவாழ்கை தனை முறிந்துக்
கொண்டு போகத்தான் வேண்டுமா என்பதனை சின்னததாய்
யோசித்து சின்னதாய் திருந்தினால் என்ன...............

*பொரும்பாலான தம்பதியினர் ஒருவர் மீது ஒருவர் அன்புடனும்
கனிவுடனும் நடத்தவே விரும்பினாலும் ,எல்லோரும் கருத்து
வேறுபாடு காரணமா, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்
தங்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து
வாக்குவாதம் செய்து பெரிதாக கத்தி கூச்சல் போட்டு
கெட்ட கெட்ட வார்தையால் திட்டி கடினமாக நடக்கின்றோமே
இப்படி நடக்கத்தான் வேணுமா ?இப்படி ஒருவரை ஒருவர்
காயப்படுத்துவதால் நாங்கள் எதை சாதிக்கின்றோம்.
என சின்னதாய் இருவரும் யோசித்து பார்த்தால் என்ன?

*கணவனும் மனைவியும் ஒரோ விதமான கருத்துக்களை
பரிமாறிக்கொள்வோம் என்று இல்லை, பெரும்பாலும்
இது நபருக்கு நபர் வேறுபடும். உதரணமாக, ஒருவர்
ஒருவிடையத்தை கூறும் போது விரிவாய் கூறவிரும்பலாம்
மற்றவர் அதனை சுருக்கமாக கேட்க விரும்பலாம், இதனை
புரிந்து கொள்ளாது சண்டை ஏற்படும் போது உங்களை புரிந்து
கொள்ள, உங்கள் மனதை சின்னாய் திறந்து ,சிந்திந்து சின்னதாய்
ஒரு தரம் யோசிந்தால் என்ன?இப்படி யோசிந்து வரும்
வாக்குவதை தவிப்பதற்காக ஒருவர் கலந்து பேசாது தவிர்க்கலாம்.
இதனையும் புரிந்து கொள்ளாது மற்றவர் விடப்பிடியாக
பேசமுயலும் போதும் அப்போதும் சண்டைவரலாம் இப்படி புரிந்து
கொள்ளாது கூட குடும்பங்களில் சண்டை வரலாம்
இதனை இருவரும் சின்னதாய் புரிந்து சின்னதாதய் யோசித்தால் என்ன?

*கணவனும் மனைவியும் வெவ்வோறு சுழலில் வளர்ந்தவர்களாக
இரு்ப்பதால் தங்களுக்குள் எப்படி பேசிக்கொள்ளவேண்டும்
என்பது குறிந்து வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பார்கள் .
உதரணமாக, ஒருவர் அமைதியான வீட்டு சூழலில் வாழ்ந்து
இருப்பார் மற்றவர் கலகலப்பான வீட்டு சூழலில் வாழ்ந்திருப்பார்
இப்படியான வாழ்வியலில் இருந்து வரும் போது ஒருவர் தன்
மனம் திறந்து பேச தெரியாமல் தவிப்பார் .மற்றவர் தன்
மனம் திறந்து வெளிப்டையாக பேசுவார், இதனை புரிந்து
கொள்ளாது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு
ஒருவர் மேல் ஒருவர் கோவம் கொள்வதால் ஏற்படுபடும்
கருத்து வேறுபாட்டால் வரும் சண்டையை தவிர்ப்பதற்கு
சின்னததாய் மனம் திறந்து யோசிந்து பார்த்தால் என்ன?

Friday, February 6, 2009

சின்ன சின்ன தகவல்கள்.........

1.தன் பிள்ளைக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் காப்பாற்றி
அரவணைத்துக் கொள்பவள் தான் சிறந்த தாய் என்று நினைத்தால்
தப்பு என்கின்றார் ஒர் அறிஞ்ர். அதாவது எந்த தாய் தனது
அரவணைப்போ ஆறுதலோ தேவையில்லாத அளவுக்கு தன்
பிள்ளைகளுக்கு தன் சொந்த காலில் நிற்கக் கற்றுக் கொடுக்கின்றாளே
அவளே சிறந்த தாயாம்...........................

2. மகிழ்ச்சியான குடும்பத்துச் சிறுவர்கள் உயரமாக வளர்ந்து விடுகின்றார்களாம்
சண்டை சச்சரவோடு இருக்கும் குடும்பத்துச் சிறுவர்கள் உயரமாக வளர்வது
கிடையாதாம். உயரமாக வளர்வதற்கு தேவையான கார்மோன் சிறுவர்களின்
மகிழ்ச்சியால் அதிகமாகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.......

3.சாதிக்க வயது தேவையில்லை 106 வயது பாட்டி கணினி முகாமில்
கலந்து கொண்டு பயிற்சி பெற்றிருக்கின்றார் (இந்தியாவின் கேரளா
மாநிலந்தில்) முயற்ச்சி இருந்தால் சாதிக்க வயது தடையில்லை
இன்றைய சாதனைகளுக்கு வயது அல்ல தடை மனசும் முயற்ச்சியும்
தான்.

4. பெண்ணுக்கு ஒரு ஆனை பிடிப்பதற்கு அவனது அக்கரை
அழகு உழைப்பு போன்ற விடையங்களை விட புதிதாய்
ஒரு விடையம் கண்டு பிடிக்கப் பட்டள்ளது. அதாவது
ஆன் பாவிக்கும் வாசனை திரவியங்களும் ஒரு காரணமாம்
இதற்கு அவர்கள் கூறும் விளக்கம், ஒரு பெண் வளரும் போது
அப்பாவிடம் நுகரும் வாசனையை ஒரு ஆணிடம் போது
அவளை அறியாமல் அவனை அவளுக்கு ரொம்ப பிடித்து போகின்றதாம்.
இதற்கு காரணம்
தன் அப்பாவிடம் உணரும் அந்த நெருக்கத்தை புதிய மனிதரிடமும்
அந்த வாசனை உணர செய்ய வைக்கின்றதாம் என்கின்றார்கள்.
அதனால் பெண்கள் கவனம் ஆண்கள் முயற்ச்சியுங்கள்.

5.உலகில் அதிகம் மக்கள் தொகை உள்ள நாடு சீனா
அந்த நாட்டில் மணப் பெண்ணுக்கு தட்டுப்பாடம் அங்கே
120 ஆண்களுக்கு 100 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்
சீனாவில் இந்த நிலமை என்றால் மற்றைய நாட்டில்
சொல்லவே வேண்டாம். ஆண்கள் எனி சீதனம் கொடுத்தே
திருமணம் செய்யும் நாட்கள் எனி வரபோகின்றதே தெரியவில்லை
அதனால் ஆண்களே யேசியுங்கள் அடுத்த 20 ஆண்டில் 2 கோடியே 30 லட்சம்
ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது
பெண்களே கவலை படாதீர்கள் சாமியாராய் போவதாக சொல்லி
ஏமாந்தும் ஆண்கள் எனி எதை சொல்லியும் ஏமாற்ற முடியாது.....