Friday, August 21, 2020

இசையில் சிலநிமிடம்!!!

Song : Malargal Ketten
Movie : O Kadhal Kanmani
Singers : Chitra, A.R. Rahman
Music : A.R. Rahman

 kyu;fs; Nfl;Nld; tdNk je;jid

jz;zPu; Nfl;Nld; mkpu;jk; je;jid (2)
vij ehd; Nfl;gpd; M ..
vij ehd; Nfl;gpd; cidNa jUtha;
vij ehd; Nfl;gpd; cidNa jUtha;
kyu;fs; Nfl;Nld; tdNk je;jid
jz;zPu; Nfl;Nld; mkpu;jk; je;jid
kyu;fs; Nfl;Nld;.. (4)
vij ehd; Nfl;gpd; cidNa jUtha;

kyu;fs; Nfl;Nld; tdNk je;jid
jz;zPu; Nfl;Nld; mkpu;jk; je;jid


fhl;by; njhiye;Njd; topaha; te;jid
,Uspy; njhiye;Njd; xspaha; te;jid (2)
vjdpy; njhiye;jhy; < ..
vjdpy; njhiye;jhy; ePNa tUtha;

kyu;fs; Nfl;Nld; tdNk je;jid
jz;zPu; Nfl;Nld; mkpu;jk; je;jid

gs;sk; tPo;e;Njd; rpfuk; Nru;j;jid
nts;sk; tPo;e;Njd; fiuapy; Nru;j;jid (2)
vjdpy; tPo;e;jhy; M ..
vjdpy; tPo;e;jhy; cd;dplk; Nru;g;gha;

kyu;fs; Nfl;Nld; tdNk je;jid
jz;zPu; Nfl;Nld; mkpu;jk; je;jid (2)
vij ehd; Nfl;gpd; M..
vij ehd; Nfl;gpd; cidNa jUtha;
cidNa jUtha;
kyu;fs; Nfl;Nld; tdNk je;jid
jz;zPu; Nfl;Nld; mkpu;jk; je;jid (2)

Sunday, August 16, 2020

தோற்றதால் தோல்விகள் கற்பித்த அறிவு!!!!

 நிறைந்த தேடல்கள்  நிறைவாய்  கிடைத்தாலும்

 காலத்தை கடந்திடவே கண்கள் நிக்கின்றது

சில தவறின் முன் கற்றிட நேரமற்ற வாழ்கைக்குள்

தானாய் வருதில்லையே  தவறுகள்!!!!

மாறிப்போன வாழ்வுமுறை



இன்றைக்கு உள்ள அவசர உலகில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிந்திக்க சில சிந்தனை படித்தால்கிடைத்தது!!!


* ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்தும், நின்றும் வேலை செய்வது.

* வீட்டிலிருந்து வேலை செய்யும் இடத்திற்கு நீண்ட தூரம், நீண்ட நேரம் வாகனத்தை ஓட்டி செல்வது.

* குளிரூட்டப்பட்ட அறையில் வேலை செய்யும் நபர்கள் அதிகம் தண்ணீர் அருந்தாமல் இருப்பது.

* சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் தவிர்ப்பது.

* காலை உணவை தவிர்ப்பது (பெரும்பாலான பிரச்சனைக்கு இதுவே முக்கியக் காரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் இதை ஏதோ நல்பழக்கம் போன்று தொடர்ந்து வருவது)

* அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வது.

* பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை சாயம் கலந்த உணவுகள் போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்ளுதல்.

* உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல் (குறைந்தபட்ச உடற்பயிற்சியான நடைபயிற்சி கூட இல்லாமல் இருத்தல்)

* புகை, மது மற்றும் போதைப் பழக்கம்.

* உயரத்திற்கு ஏற்ற எடையை மீறிய உடல் பருமன்.

* போதிய தூக்கமின்மையும், நேரம் தவறிய தூக்கமும்.  

* அருகில் நடந்து செல்லும் தூரமாக இருந்தாலும் வாகனம் பயன்படுத்துவது.

* ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சரியான மருந்தை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது.

* குழந்தைகள் அதிக நேரம் காணொளிகளைக் காண்பது.

* பணி ஓய்வுக்குப் பின்னான சோம்பலும் சுறுசுறுப்பின்மையும்.  

* குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடாமல் இருப்பது.

இதனால் வரக்கூடியவை..?

*  உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பதால் நம் தசைகள் வலுவானதாக இருக்காது. இதனால் நீண்ட நேரம் அமர்ந்து அல்லது நின்று வேலை செய்பவர்களுக்கு தசைகள் தளர்வாக ஒருபக்கமும், இறுக்கமாக மறுபக்கத்திலும் இருக்கும். இதனால் மூட்டுகளில் வலி ஏற்படும். 30 வயதே ஆனாலும் கூட ஒருவருக்கு எளிதில் முதுகு வலி, கழுத்து வலி, கால் மூட்டு வலி வர வாய்ப்புகள் அதிகம்.  

*  தசைகள் சீராய் செயல்படாமல் இருந்தால் எலும்புகளில் அழுத்தம் அதிகரிக்கும். அதனால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து எலும்பு தேய்மானம் ஏற்படக்கூடும். மேலும், முதுகு தண்டுவடப் பகுதியில் உள்ள குஷன் போன்ற ஜவ்வு தட்டுக்கள் சீக்கிரம் பிதுங்கக்கூடிய வாய்ப்புகளும், வறட்சியடையும் வாய்ப்புகளும் உண்டு.

*  தசைகள் வலுவாக இல்லையென்றால் மூட்டுகளை சுற்றியுள்ள ஜவ்வு எளிதில் கிழியலாம். இதனால் மூட்டுகள் எளிதில் தன் இடத்தில் இருந்து இடம்பெயறும். இதனை joint dislocation என மருத்துவத்தில் கூறுவோம்.

* மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும்.

*  ஸ்டாமினா குறைவதால் சிறிது தூரம் நடந்தாலோ, படிகளில் ஏறினாலோ மூச்சு வாங்கக்கூடும். அதனால் எப்போதும் மந்தமாக இருப்பார்கள்.

*  ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சரியான மருந்தை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் இருதய அடைப்பு, பக்கவாதம் போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும்.

* சரிவர தண்ணீர் குடிக்காததாலும், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தேவையற்ற மருந்து மாத்திரைகள் உட்கொள்வதாலும் கிட்னி பாதிப்படையக்கூடும்.

* பணி ஓய்வு பெற்றவர்கள் தங்கள் அன்றாட இயக்கங்களை குறைத்துக் கொள்வதால் தசைகள் வலுவிழந்து கீழே விழுவது போன்றவை ஏற்படலாம்.

* தேவைக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை உட்கொள்வதால் இருதய ரத்தக் குழாய்களில் கொழுப்பானது அதிகமாக சேர்ந்து இருதய அடைப்பு ஏற்படக்கூடும். மேலும், மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்படும்போது பக்கவாதம் வரக்கூடும்.

* மனச்சோர்வும், மன அழுத்தமும்.

*  பெண்களுக்கு சீரான மாதவிடாய் வராமல் இருப்பது, கருப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றுவது போல கருப்பை கோளாறுகள் தோன்ற வாய்ப்புகள்
அதிகம் உண்டு.

*  குழந்தைகளுக்கு ஏ.டி.எச்.டி (ADHD - Attention Deficit Hyperactivity Disorders) போன்ற உளவியல் கோளாறுகள் வரலாம். மேலும், பேச்சு தாமதம் போன்ற பாதிப்புகளும், உடல் பருமன் பிரச்சனையும் வரக்கூடும்.

* நேரத்திற்கு சாப்பிடாமல் தாமதமாக உணவு உண்பதால் இரைப்பை, குடற்புண் வருவதற்கு வாய்ப்புண்டு.

* புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய் வரவும், அதிலும் குறிப்பாக குடல்புற்றுநோய் வரவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும்  ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கும் வாய்ப்புள்ளது.

தீர்வுதான் என்ன?

*  தினமும் உடற்பயிற்சி செய்வதனால் 70 சதவீத நோய்களை தள்ளிப் போடலாம்.

*  உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் குறைந்தது 45 நிமிடங்களுக்கு மேல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

* ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சரிவர மருந்துகள் எடுத்துக்கொண்டு, அவ்வப்போது அதன் அளவுகளை கண்காணிக்க வேண்டும்.

* ஏதேனும் ஒரு வெளி விளையாட்டில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

* உணவு முறையில் அவரவர் உடலுக்கும், வயதுக்கும், வாழ்வுமுறைக்கும் ஏற்ற மாற்றங்களை தகுந்த ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவியுடன் செய்துகொள்ளலாம்.

* முடிந்தவரை வாகனங்களை பயன்படுத்துவதை குறைத்தும், தவிர்த்தும் நடப்பது.

*  மிதிவண்டியை ஓட்டி பயன் பெறலாம்.

* முடிந்தவரை வெளி உணவுகளை, அதிலும் குறிப்பாக துரித உணவுகளை தவிர்த்தல் நல்லது.

* குழந்தைகளை அதிகநேரம் தொலைக்காட்சி, கைப்பேசி பார்க்க அனுமதிக்காமல் இருக்கவேண்டும்.

* குழந்தைகளை தினமும் வெளி விளையாட்டுகளில் ஈடுபடுத்த வேண்டும். எனவே நாம் ஒவ்வொருவரும் நம் தவறான வாழ்வுமுறை மாற்றங்களை இன்றைக்கே சரிசெய்து சுகாதாரமான வாழ்வுமுறைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்வை மீண்டும் பெறக் கிடைத்த ஒரு வாய்ப்பாக இதனை நினைத்து இப்போதே நம் வாழ்வியல் முறையை மாற்றி ஆரோக்கியத்திலும் வயதிலும் சதம் அடிக்கலாம்.

Friday, August 14, 2020

முருங்கை கீரையில் உள்ள அற்புத சத்துக்களும் பயன்களும் !!

 மாலைக் கண் தீர, இரத்தம் விருத்தியாக முருங்கை கீரையை வதக்கியோ, கூட்டு கீரையாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் முக்கியமாக மாலைக்  கண் நோய் வராமல் தடுக்கலாம். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளது.


முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் மிகுதியாக உள்ளன. முருங்கை பூவைப் பருப்புடன்சேர்த்து சமைத்து சாப்பிட உடல் பலம் பெறும். முருங்கை காயை எந்த வகையிலாவது சமைத்து தொடர்ந்து சாப்பிட சளி குறையும்.
 
முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. முருங்கைப்பூவை பொடிமாஸ் மாதிரி செய்து சாப்பிடலாம். அரைவேக்காடு  வேக வைத்த பாசிப்பருப்புடன், முருங்கைப்பூவையும் பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது குழந்தையின்மைப் பிரச்னை தீர உதவும்.  கர்ப்பப்பைகோளாறுகளை சரி செய்யும்.
 
முருங்கைக் கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் சி யும், 
வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப்  போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளது.
 
மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.
 
முருங்கை இலையினுடைய பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க 
உதவுகின்றது.
 
முருங்கை இலையில் உள்ள பாக்டீரீயா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியானது,  உங்களுடைய சருமத்தில் உண்டாகின்ற தொற்றுக்கள், பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்சினைகள் போன்றவற்றில் இருந்து உங்களைக் காப்பாற்ற உதவுகிறது. இது சிறுநீர்ப் பாதையில் ஏற்படுகின்ற தொற்றுக்களைப் போக்கவும்  உதவுகிறது.
 
முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதத்துக்கு இணையானது. மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. 
 
மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ  உணவு முருங்கைக்கீரை.

Wednesday, January 27, 2016

வாசித்ததில் பிடித்தது

பெண்!!!
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.
அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.
அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.
“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.
“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.
அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.
“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.
ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”………கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்

Tuesday, August 4, 2015

உறுதியாக மறுத்துவிடுங்கள்

காத‌லி‌ப்ப‌தி‌ல் எ‌வ்வளவு உறு‌தி வே‌ண்டுமோ அதை ‌விட காதலை மறு‌ப்ப‌திலு‌ம் உறு‌தியாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அதுதா‌ன் இருவரது வா‌ழ்‌க்கையையுமே ந‌ல்ல முறை‌யி‌ல் கா‌ப்பா‌ற்ற உதவு‌ம். 

ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் வந்து தனது காதலை சொல்லும்போது அதற்கு மூன்று பதில்கள் இருக்கலாம்.

எந்த பதிலாக இருந்தாலும், உடனடியாக அந்த இளைஞனிடம் அதனை உறுதியாக சொல்லிவிடுவது நல்லது.

அது என்ன மூன்று பதில்கள், ஒன்று ஆம், நானும் உங்களை காதலிக்கிறேன், இர‌ண்டாவது ப‌தி‌ல் எனக்கு யோ‌சி‌க்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டும், மூன்றாவது இல்லை. எனக்கு உங்கள் மீது காதல் இல்லை என்பதுதான்.

முதல் மற்றும் இரண்டாம் பதில்களுக்கு பெரும்பாலும் ஆம் என்ற ஒரே அர்த்தம்தான் வரும். அதாவது காதலிக்கிறேன், நன்கு யோசித்து சொல்கிறேன் என்றால், யோசிக்கும் இடத்தில் அவர் இருக்கிறார் என்றுதானே அர்த்தம்.

அப்படி யோசித்து இல்லை என்றாலும் அதை உடனடியாக கூறி விட வேண்டும். ஆனால் இல்லை என்ற பதிலை உடனடியாக கூறி விடுவது ஒருவரின் வாழ்க்கையையேக் காப்பாற்றும்.
WD
ஒரு இளைஞனை காதலிக்க முடியாது என்ற பட்சத்தில், அவரிடம் உங்களை காதலிக்க முடியாது என்று மறுத்து விடுவது நல்லது. அதைவிடுத்து, காதல் கடிதம் கொடுத்த பின்னரும் எந்த மாற்றமும் இல்லாமல் அவருடன் ஊர் சுற்றுவது, பேசுவது என்று இருந்துவிட்டு கடைசியாக இதெல்லாம் செஞ்சா காதலிக்கிறேன் என்று அர்த்தமா என கேள்வி கேட்கக் கூடாது.

இதனால் அந்த இளைஞனின் மனம் பெரிதும் பாதிக்கப்படும். 

மேலும், காதலை மறுப்பதை தெளிவாக செய்ய வேண்டும். தனக்குப் பிடிக்காதவன் காதல் கடிதம் கொடுத்தால், உடனே பெற்றோரிடம் சொல்லி சண்டைபிடிக்க வைக்கக் கூடாது.

அப்போதே அவனிடம் தெளிவாக எனக்கு உன்னைப் பிடிக்க வில்லை. இது பற்றி நான் யாரிடமும் கூற மாட்டேன். இனி என் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிடு என்று கூறலாம்.

WD
மேலும், காதலைச் சொன்னவரின் மனம் புண்படாதவாறு, தனது நிலையை எடுத்துச் சொல்லி காதலில் தனக்கு உடன்பாடில்லை என்பதை நாகரிகமாகச் சொல்லலாம். 

காதலை மறுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதிலும், அதனை நாகரீகமாக மறுப்பதும் முக்கியம். அவரிடம் வேண்டாம் என்று கூறிவிட்டு, எல்லோரிடமும், அவன் என்னை காதலிக்கிறானாமாம் என்று கூறிக் கொண்டு அலையக் கூடாது. அதுதா‌ன் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்

ஏமாற்றுக் காதல்

ஆண், பெண் இருவரும் மிக மிக எச்சரிக்கையாக அணுக வேண்டியது இப்படிப்பட்ட ஏமாற்று நபர்களைத்தான். காதல் என்பதை ஒரு தொழில் மாதிரி மிகச் சிறப்பாக, கச்சிதமாக செய்வார்கள். 

இவர்களது நோக்கம் பணம், செக்ஸ் அல்லது பொழுதுபோக்கு இவையாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட நிலை வந்ததும் தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவெடுத்து காதலில் இவர்கள் இறங்குவதால் மிகப் பக்குவமாக இருப்பார்கள். 

இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பிக்க இரண்டே வழிகள்தான் உள்ளன. இரண்டுமே அவர்களது பலகீனமே. 

அதாவது, பொய் மற்றும் நண்பர்கள். 

இந்த இரண்டில் தெளிவாக இருந்தால் இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து தவிர்த்துவிடலாம்.

இவர்கள் கூசாமல் நிறைய பொய் சொல்வார்கள். முன்னர் சொன்ன பொய்யை, அப்படிச் சொல்லவே இல்லை என்று சாதிப்பார்கள். 

அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசுவார்கள். கண்டுபிடித்துக் கேட்டால், அதை ஒரு குற்றம் மாதிரி எடுத்துக் கொள்ளாமல் ஏதாவது பரிசு கொடுத்து அல்லது மீண்டும் சில பொய்கள் சொல்லி சமாளிப்பார்கள். பொய்கள் எண்ணிக்கை உயரும் பொழுது கொஞ்சம் சுதாரித்துக் கொண்டால் இவர்களது நோக்கத்தினை மிகத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். 

அடுத்ததாக நண்பர்கள். 

அதாவது நட்பு என எவரையும் அறிமுகப்படுத்த மாட்டார்கள். நீங்கள் யாரையாவது அறிமுகப்படுத்த விரும்பினாலும் சாமர்த்தியமாக தட்டிக் கழிப்பார்கள். 

மிக புத்திசாலித்தனமாக நடப்பவர்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒன்று அல்லது இரண்டு நண்பர்களை மட்டும் நாடகத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்துவார்கள். இவர்கள் ஏதாவது பிரச்சனைகள் தோன்றும் நேரங்களில் மட்டும் ஆஜராகி மிக அற்புதமாக அவற்றைத் தீர்த்துவிட்டு விலகுவார்கள். 

தற்செயலாக உறவுகள், நட்புகளை சந்திப்பது இருக்காது. அம்மாவிடம் இந்த வாரம் கூட்டிப் போகிறேன் என மிக உறுதியாக வாக்குறுதி கொடுப்பார்கள். கடைசி சில நிமிடங்களில் உடல் நலம் சரியில்லை, ஊருக்குப் போய்விட்டார்கள் என நடிப்பார்கள். 

அவர்கள் எதிர்பார்ப்பது செக்ஸ் என்றால், அதனை அனுபவித்த பின்னர் விலகுவாக்ரள். அல்லது சுய ரூபத்தைக் காட்டி செக்ஸ் டார்ச்சர் கொடுப்பார்கள். பணம் அல்லது சொத்து என்றால் அவசரக் கல்யாணம் வரை போவார்கள். 

பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கவில்லை என்று நாடகமாடுவார்கள். திருமணத்திற்குப் பின் தேவையானதை சுருட்டிக்கொண்டு ஓடுவார்கள். அல்லது காதல் வேண்டாம் காசு வேண்டும் என சுய ரூபத்தைக் காட்டுவார்கள். 

இப்படிப்பட்ட நபர்களும் நம் சமூகத்தில் கலந்து இருப்பதால் இவர்களை அடையாளம் கண்டு விலக வேண்டியது மிக முக்கியம்.