Saturday, November 22, 2014

ஏன் இவர்கள்..............

பெண்களை வைத்துப் போற்றி, புகழந்து, காவியம் படைத்து போராட்டம் நடத்தி, மேடைப் பேச்சுகளால் அதிர வைத்து முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். ஆனால், அன்றும் இன்றும் பல்வேறு சக்திகளால் நசுக்கப்பட்டுப் பின் தள்ளப்படும் ஒரு ஜென்மமாகவே பெண் இருக்கிறாள்.

அரசியல், விஞ்ஞானம்,மருத்துவம் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய பெண்கள் ஒரு சிலர் தன் நுண்ணறிவு, ஆளுமை விருத்தியால் முன்னேறி ஜொலித்தாலும் அதிகளவிலும் அதிகளவு இந்தப் பெண்களை சமுதாயம் கம்பிகளுக்குப் பின்னால் கொத்தடிமைகளாக வைத்துப் பார்க்கவே விரும்புகிறது. எப்படித்தான் முற்போக்கான கருத்துகளை சமுதாயம் அள்ளி வீசினாலும் துருப்பிடித்த கருத்துகளை விட்டு இன்னும் அகலவே இல்லை. பெண்களின் உணர்வுகளை நசுக்கி ஆண்களுக்கு எல்லா விதத்திலும் பாதை அமைத்துக் கொடுக்கிறது.


விதவைகள்! இவர்கள் விழி இருந்தும் குருடர்களாகச்; சமுதாயத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கைம்பெண்களின் உணர்வுகளுக்கு எத்தனை வீதம் மதிப்பளிக்கப்படுகின்றதோ தெரியாது. ஆனால்; கடுமையான மன அழுத்தம், வடுக்கள், ரணங்கள், சோதனைகள் என நிகழ்கால எதிர்காலப் போராட்டம் மற்றும் ஒருவித தாழ்வு மனப்பான்மை என மீள்பார்வை இல்லாத ஒரு நிரந்தர இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜமான உண்மை.

போர், இயற்கை அனர்த்தம், திடீர் விபத்துகள், அகால மரணம், தற்கொலை மற்றும் முக்கிய அம்சமாக ஆண்கள் வயது இறப்பு வீதம்; போன்ற முக்கிய காரணிகளால் பெண்களே அதிகளவில் தனிமைக்குத் தள்ளப்பட்டு ஒற்றையாக நிற்பதோடு விதவையாக, ஒரு நீண்ட கால உடல்,உள பாதிப்புகளுக்கும் உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறாhகள்;. அதிலும் போர், இயற்கை அனர்த்தம் மற்றும் குழப்ப சூழ்நிலைகளால் அதிகளவு இளம் பெண்களே வாழ்க்கையைப் பறி கொடுத்துத் தவிக்கின்றனர்.

ஒரு பெண்ணுக்குத் தேவையான உணவு, உடை,உறைவிடம் அத்துடன் அவளும் அவளது குழந்தைகளும் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வதற்கும் வளர்வதற்கும் உரிய ஒழுங்கு முறைகளை இந்தச் சமுதாயம் என்ற குடும்பம் சீரான முறையில் அமைத்துக் கொடுக்க வேண்டும். விதவைகள்தானே எனத் திரைக்குப் பின்னால் நிறுத்திப் பார்க்கக் கூடாது (ஆனால் அப்படியே நிறுத்திப் பழகி விட்டது என்பதனை யாராலும் மறுக்க முடியாது)

துணை இழந்த ஆணுக்குக் கிடைக்கும் வாழ்க்கையின் மறுமலர்ச்சி, அங்கீகாரம், உரிமை, கருத்துச் சுதந்திரம் இவைகள் கூட இந்தக் கைம்பெண்கள் விடயத்தில் ஒரு பக்கச் சார்பான முறையில் முரட்டுத்தனமான கருத்துகாளல் முடக்கி விடப்படுகின்றனர். மேலும் இந்த விதவைகள் விடயத்தில் அவர்களின் உயர்வுகள், கருத்துகள் கூட வெளியிட இந்தக் கட்டமைப்பு அனுமதிப்பதில்லை. இவர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்புää ஒத்துழைப்பு புனர்வாழ்வு மற்றும் மறுவாழ்வு என்பன மிக மிகக் குறைவாகவே உள்ளன.

முற்போக்குத்தனம் பேசி நீலிக் கண்ணீர் வடிக்கும் முதலைகளே அதிகளவு சமுதாயத்தில் உள்ளனர். விதவைகள் விடயத்தில் நலிந்த கருத்துகள் தொய்ந்து போன நிலையில் தென்படுவதால் பாலியல் துஷ்பிரயோகம், பெண் வன்முறை,விபசாரத்தில் ஈடுபடுத்தல் மற்றும் பல்விதமான இம்சைகள் போன்ற அசிங்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

மேலும் இளவயது விதவைகள் ஒற்றையாக நிற்பது மட்டுமின்றி, தமது பிள்ளைகளின் எதிர்கால நலன், கல்வி முன்னேற்றம், நடைமுறை வாழ்வில் ஒழுக்க, பண்பாடு, சமயம் சார்ந்த ஆன்மீகம் இவைகளை ஒரு ஒழுங்கு முறையில் யதார்த்த நடைமுறை சார்ந்த ஒரு வட்டத்தில் நடைமுறைப்படுத்துவற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான விடயங்களில் இவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் சமுதாயத்தின் முன்னால் வேலியில் சிக்குண்ட சீலையாய் அல்லல்படுகிறாள். இதனால் இவர்களும் இவர்களின் பிள்ளைகளும் தடம்புரண்டு போக வாய்ப்பு உண்டு. வயிற்றுக்காவே பல அசிங்கங்களை உள்வாங்கிக் கொள்வதோடு இவர்களின் பரம்பரைகள் கூட வேறு விதமான பாதையில் அதாவது, போதை,பாலியல்சார் தொழில், பாதாள தொடர்பு என பல தவறான திசைகளிலும் பறக்கத் தொடங்குகின்றன.

நெருக்கடியான வாழ்க்கையிலிருந்து விதவைகளை மீட்டெடுக்க வேண்டும். சமூகம் சார்ந்த காரணிகள் உதாரணமாக,பொருளாதார நிலைமை, நேர்முகமாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்துகின்றது (வறுமை, தொழில்) இந்த விதவைகள் அடுத்தவரில் தங்கியிருக்காது சுயமாகத் தன்னையும் தன் பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்ள வழியமைத்துக் கொடுக்க வேண்டும். அப்படித் தவறும் பட்சத்தில் அல்லது விதவைகளை முன்னோடிகளாக முன்னிறுத்த மறுக்கும் பட்சத்தில் செய்வதறியாத தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாவதோடு ஒரு விதமான இறுக்கமான வெறுப்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் வாழ்வதற்குரிய வளங்களை வேறு விதத்தில் தேடிகொள்ள முற்படுகின்றனர். சமுதாயம் விடும் தவறினால் இவர்களின் சந்ததியினர் கூட பாரிய விளைவுகளையும் தொற்று நோய்களையும் அந்நாட்டுக்கே அன்பளிப்பாகக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று உலகளாவிய ரீதியில் 245 மில்லியனுக்கு அதிகமான விதவைகள் உள்ளனர் என்று கூறும் ஐக்கிய நாடுகள் சபை 11 கோடியே 50 இலட்சம் விதவைகள் கடும் வறுமையினால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மற்றும் எமது நாட்டின் மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரதியமைசச்ர் எம்எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வடக்கு மற்றும் கிழக்கில் 89 ஆயிரம் யுத்த விதவைகள் இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் விதவைகளும் வடக்கு மாகாணத்தில் 40 ஆயிரம் விதவைகளும் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளர். இதில் மிகவும் கவலையான விடயம் என்னவெனில் 12 ஆயிரம் பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எட்டாயிரம் பேர் ஆகக்குறைந்தது மூன்று பிள்ளைகளுடன் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக், ஆப்கானிஸ்தான், பலஸ்தீனம் போன்ற யுத்த வலய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான விதவைகள் வாழ்விழந்து நிற்கின்றனர். பலஸ்தீன் போன்ற நாடுகளில் விதவைகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் இளைஞர்களே மறுவாழ்வு கொடுக்க முன்வந்துள்ளனர். விதவைகளுக்குச் சமுதாயத்தில் ஓர் உயரிய அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும். பாலியல் உறவுகள் வியாபாரமாகிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கழுகுகளின் பார்வையிலிருந்து இப்படிப்பட்டவர்கள் தப்பவது கஷ்டம். அடுத்த வேளை உணவு, பிள்ளைகளின் தேவை,பராமரிப்புச் செலவுக்காகக் கட்டாயத்தின் பேரில் பாலியல் தொழிலைச் செய்பவர்களும் உண்டு.தம்மை அறியாமலேயே சதி வலையில் சின்னா பின்னமாக்கப்படுபவர்களும் உண்டு. தொழில், வேலை வாய்ப்பு என்ற போர்வையில் நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இந்த விதவைகள் விற்கப்படும் அவலங்களும் நிகழாமல் இல்லை. இப்படிப்பட்ட தரகர்களை சட்டம் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். விதவைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கல்வித்துறையோ விஞ்ஞானத்துறையோ மருத்துவத்துறையோ நாடு எப்படி முன்னேறினாலும் விதவை சம்பந்தமான அவலங்களையும் கருத்தில் கொண்டு விடிவு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கலாசார, பண்பாடு சீர்கேடுகளை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவர்களின் பிரச்சினைகளைப் பாரிய சவாலாகக் கருத்தில் கொண்டு சிறந்ததொரு திட்டத்தினையும் விடிவினையும் ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 
நன்றி: வீரகேசரி வாரவெளியீடூ 13-11-2011

Friday, January 3, 2014

எனக்குப்பிடித்தபாடல் வரிகள்....













8.பெண் : கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு
காதலிச்ச காலமெல்லாம்
கனவு போல ஆச்சு
அதில் கரையுது எந்தன் மூச்சு
பூந்தோரணம் அது ஏன் வாடணும்
போராட்டமா நம் சீர் சீதனம்
தண்ணியில மானப் போல நானிருக்கேன்
ஓ ஓ தரையில மீனைப் போல நீயிருக்க

கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு
காதலிச்ச காலமெல்லாம்
கனவு போல ஆச்சு
அதில் கரையுது எந்தன் மூச்சு

***

பெண் : வெத்தலையில் பாக்கு வெச்சு
பத்துப் பேரைப் பார்க்க வெச்சு
கட்டிக்கிட ஆசைப்பட்டேன் நானே
மத்தவங்க துணையுமில்ல
அத்தை மவன் உறவுமில்ல
துக்கப்பட்டு துடிக்குது ஒரு மானே
தீராத கோபம் அது யார் போட்ட தூபம்
இதில் நான் செய்த பாவம் என்ன
என்னவோ பாடுறேன்
சொந்தம் ஒண்ணு தேடுறேன்

கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு
காதலிச்ச காலமெல்லாம்
கனவு போல ஆச்சு
அதில் கரையுது எந்தன் மூச்சு

***

ஆண் : நம்பி வந்த காதல் ஒண்ணு
அன்பு உள்ள பாசம் ஒண்ணு
ரெண்டுப் பக்கம் தவிக்கிறண்டி மானே
அண்னனுக்கு பயந்த தம்பி
அண்ணியாரு மனசை நம்பி
உன்னை இங்கு அழைத்து வந்தேன் நானே
தாய் தந்தை கோபம்
அதில் வாழ்கின்ற பாசம்
ஒரு தவறாகிப் போகாதடி
மெல்ல மெல்ல மாறும்
நல்ல வழிக் கூறும்

கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு
தாலி கட்டி முடிந்ததுமே
தாரம் என்று ஆச்சு
இனி வேறு என்ன பேச்சு
பூந்தோரணம் அது வாடாதம்மா
போராடியே அதைக் காப்பேனம்மா
தண்ணியிலே மானைப் போல நானிருக்கேன்
ஓய் தரையிலே மீனைப் போல நீயிருக்க

பெண் : கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு

ஆண் : தாலி கட்டி முடிந்ததுமே
தாரம் என்று ஆச்சு
இனி வேறு என்ன பேச்சு










7.ஆண் : கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே

***

ஆண் : க ரி ஸ ப ம க...பா நி
ச ரி க ரி க ஸ...நீ பா

ஆண் : ஆ..ஆ..ஆ..ஆ..

ஆண் : நீ பார்த்ததால் தானடி
சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி
பூ பூத்தது பூங்கொடி

பெண் : தவம் புரியாமலே
ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடிமீதிலே
ஒரு இடம் கேட்கிறாய்
ஒரு வாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும்
தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்

கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே

***

ஆண் : புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டை தான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்

பெண் : இந்த வனமெங்கிலும்
ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும்
அதை தினம் பாடினேன்
மலரில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது
உறவுகள் என தினம்
கனவுகள் பல வளர்த்தேன்

கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே

ஆண் : அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே










6..என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ

***

தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ
தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா

***

ஆ..ஆ...ஆ...ஆ
கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ







5.பெண்: அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி 

(இசை...)

பெண்: எந்தக்காற்றின் அலாவளில் 
மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் 
மலரிதழ் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே 
இதயத்திலே இதயத்திலே
உனது இருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கரை கரை (அனல் மேலே பனித்துளி...)

(இசை...)

பெண்: சந்தித்தோமே கனாக்களில்
சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுவாய் கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழிசொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனை அடித்து
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட (அனல் மேலே பனித்துளி...)












4.அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் 
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ 
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே 
சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே 
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே 
புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் 
கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் 
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே 
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே 
புவிராஜன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே 
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் 
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே 
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் 
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே










3. ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

நெஞ்சிலொரு தும்பி பறக்கும் ஹைய்யோ ஹையய்யோ
செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹைய்யோ ஹையய்யோ

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

கடல் கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ ஹோய்
துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவானம் மழைதானோ
காதல் விழாக் காலம் கைகளில் வாவா ஈர நிலாப் பெண்ணே
தெம்மாங்கை ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல் ஆடி வா
வீணை புது வீணை சுதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ
கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ ஹோய்
பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்
நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ
பூஞ்சோலை பூக்களுக்குத் தாய்தானோ
ஆசை அகத்திணையா
வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வாவா புதுக்காதல் குறுந்தொகையா

ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

நெஞ்சிலொரு தும்பி பறக்கும் ஹைய்யோ ஹையய்யோ
செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹைய்யோ ஹையய்யோ

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்குமே கிளி தங்குமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி









2.பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ..ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

பெண்குழு : தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்துதா தும்தும் 
தும்தும்தும்துதா தும்தும் தும்துதா தும்தும் தும்தும்

***

பெண் : எம்மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு

பெண்குழு : ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஒ...ஓ...ஒ...

ஆண் : கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு
மீனாட்சிக் குங்குமத்தை... நெத்தியிலே சூடச் சொல்லு




பெண் : சொன்னத நானும் கேட்குறேன் சொர்ணமே அங்கபோய் கூறிடு

ஆண் : அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு

பெண் : மாமன் நெனைப்புத்தான் மாசக்கணக்கிலே பாடா படுத்துது
என்னையே புது பூவா வெடிச்ச பின்னையே

ஆண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

***

ஆண் : வேலங்குச்சி நான் வளைச்சி வில்லுவண்டி செய்ஞ்சி தாறேன்
வண்டியிலே வஞ்சி வந்தா வளைச்சி கட்டி கொஞ்ச வார்றேன்

பெண் : ஆலங்குச்சி நான் வளைச்சி பல்லக்கொன்னு செய்ஞ்சித்தார்றேன்
பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சி கொஞ்ச வார்றேன்

ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி

பெண் : கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி

ஆண் : ஊரும் உறங்கட்டும் ஒசை அடங்கட்டும்
காத்தா பறந்து வருவவேன் புதுபாட்டா படிச்சி தருவேன் 

பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

ஆண் : பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

ஆண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே




 1.. புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்ரு
தூங்குது தூங்குது பாரம்மா - அதை
சூரியன் சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய்த் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா?
இதயம் பரவை போலாகுமா பரந்தால் வானமே போதுமா?

(புல்வெளி)

 சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிரகைத் தந்தது யாரு?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலனூரு வன்னம் உன்மேல் தந்தது யாரு?
இலைகலில் ஒலிகின்ர கிலிக் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிலைகலில் ஒலிகின்ர குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திரந்திருக்கு பாருங்கல் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கல்

(புல்வெளி)

துல்துல்துல் துல்துல்துல்லென துல்லும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
மலையன்னை தருகின்ர தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெல்லை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பரக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திரந்திருக்கு பாருங்கல் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கல்

(புல்வெளி)